Saturday, August 29, 2009

என் அன்பு காதலா!!!! (To My Sweet Hubby)


சிறு பெண்ணாக உன் கையில்
ஒப்படைக்கபட்டேன்

சின்னச் சிறு நாற்றாக என்னை
உன் வீட்டு தோட்டத்தில்
ஏற்று கொண்டாய் !!!!

அங்கு உள்ள ஆலமரத்திருக்கு
அடிபணிய கற்று குடுததாய்

நாணலாக வளைந்து போக சொல்லி தந்தாய்

உன்னால் எனது உலகம் இனிமை ஆனது !!!

பாறை ஆக இருந்த என் மனம்
உன் பார்வைகள் மூலம் பூ ஆனது

உன் முகம் பார்த்து இதழ் விரித்ததால்
நான் தாமரை ஆனேன்!!!

உன்னை தொடர்ந்து முகம் திருப்புவதால்

நான் சூரிய காந்தி ஆனேன் !!! சில நேரங்களில் விதியின் சதியால்
நான் எரிந்து சாம்பல் ஆனேன்

உன் அன்பால் உயிர்த்து எழுந்தேன்

பினிக்ஸ் பறவை ஆக !!!

எனக்கு தெரியும் நீ
என்னை விட அழகன் என்று

உன் அருகில் இருப்பதால் நான் அழகி ஆனேன்!!!

எனது வலிகளின் போது நீ துடித்தாய் ...
எனது பிதற்றலை நீ சகித்தாய் ...
என் கண்ணில் கண்ணீர்
காணும் போது நீ கதறி அழுதாய் ....

எனது பனி காலத்தில்
உனது பார்வை
ஒன்றே போர்வையாக
எனது இளவேனிர்காலத்தில் குளிர் காற்று நீ

இருட்டிலும் என் நிழல் நீ

இறுதி வரை வரும் உறவு நீ !!!!


என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டாய்

விலை மதிப்பில்லாத உன் காதல்
என்னிடம் இருக்கும் போது

விலை பெறகுடிய பரிசா நான் கேட்பேன்??

என் வாழ்நாள் முழுமைக்கும்
உனது அன்பு மட்டும் போதும்!!!!

பி.கு : வலையுலகில் எனது முதல் கவிதை (கவுஜ) , மீள்பதிவு

85 comments:

S.A. நவாஸுதீன் said...

வலையுலகில் எனது முதல் கவிதை மீள்பதிவு

முதல் பந்திலேயே சிக்ஸர். மாம்ஸ் எங்கே இருக்கீங்க. ஒரு நிமிஷம் இந்த பக்கம் வந்துட்டு போங்க

S.A. நவாஸுதீன் said...

பாறை ஆக இருந்த என் மனம்
உன் பார்வைகள் மூலம் பூ ஆனது
உன் முகம் பார்த்து இதழ் விரித்ததால்
நான் தாமரை ஆனேன்!!!

ரொம்ப அழகான வரிகள் காதலை சொல்ல

S.A. நவாஸுதீன் said...

என் வாழ்நாள் முழுமைக்கும்
உனது அன்பு மட்டும் போதும்!!!!

நீங்க ரெண்டு பேருமே கொடுத்து வச்சவங்கப்பா.

Made for Each Other

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா


அருமை அருமை.

நட்புடன் ஜமால் said...

எனக்கு தெரியும் நீ
என்னை விட அழகன் என்று
உன் அருகில் இருப்பதால் நான் அழகி ஆனேன்!!!]]

இது தான் அழகென்பது

*இயற்கை ராஜி* said...

Made for each other jodi inga onnu irukku...ellarum vangaaaaaaa:-))

Vidhoosh said...

very romantic.
vidhya

அ.மு.செய்யது said...

//என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டாய்
விலை மதிப்பில்லாத உன் காதல்
என்னிடம் இருக்கும் போது
விலை பெறகுடிய பரிசா நான் கேட்பேன்??//

இதே கேள்வியை முட்டாள்தனமாக நானும் கேட்டு வைத்து,வாங்கி கட்டி கொண்ட அனுபவமும் உண்டு.

அதெல்லாம் ஒரு காலம்......நல்லா இருக்குங்க கவிதை.( பழைய ஞாபகம் )

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டாய்
விலை மதிப்பில்லாத உன் காதல்
என்னிடம் இருக்கும் போது
விலை பெறகுடிய பரிசா நான் கேட்பேன்??//

இதை விட அழகாக சொல்ல முடியுமா அன்பை??

உங்கள் பதிவுகளில் இணைக்கப்பட்டுள்ள படங்கள் யாவும் அழகானவை :)

சக்தி, அருமை.

கபிலன் said...

ஆஹா...டச்சிங்க்....

SUFFIX said...

அன்பு தொடருட்டும். வாழ்த்துக்கள் சக்தி.

Anbu said...

ரைட்டு...நடத்துங்க,,,

Anonymous said...

காதல் பொழியும் கார் மேகமே கருத்தே இருக்கட்டும் உன் மேகம் என்றும் காதலில்....

thiyaa said...

காதல் கவிதை அழகு

GEETHA ACHAL said...

நல்லா இருக்கு...அருமை...

ஹேமா said...

சக்தி உங்க மனசை அப்பிடியே கொட்டி வச்சிருக்கீங்க.
அள்ளி எடுதிட்டாரா !

தமிழ் said...

அழகான வரிகள்

சீமான்கனி said...

//உன்னை தொடர்ந்து முகம் திருப்புவதால்
நான் சூரிய காந்தி ஆனேன் !!!//

அழகான கவிதை....அழகான வரிகள்.....
மிச்சமில்லாமல் ரசித்து படித்தேன்...
வாழ்த்துகள்.....

ஈரோடு கதிர் said...

நல்லா காதலிக்றீங்க சக்தி

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

வலையுலகில் எனது முதல் கவிதை மீள்பதிவு

முதல் பந்திலேயே சிக்ஸர். மாம்ஸ் எங்கே இருக்கீங்க. ஒரு நிமிஷம் இந்த பக்கம் வந்துட்டு போங்க

ஏன் அண்ணா அவராவது இந்த பக்கம் வருவதாவது

ஜெறின் said...

அருமையான கவிதை.........
கலக்கிடீங்க போங்க!!!!!!!!!!!!!!

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

பாறை ஆக இருந்த என் மனம்
உன் பார்வைகள் மூலம் பூ ஆனது
உன் முகம் பார்த்து இதழ் விரித்ததால்
நான் தாமரை ஆனேன்!!!

ரொம்ப அழகான வரிகள் காதலை சொல்ல

நன்றி அண்ணா

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

என் வாழ்நாள் முழுமைக்கும்
உனது அன்பு மட்டும் போதும்!!!!

நீங்க ரெண்டு பேருமே கொடுத்து வச்சவங்கப்பா.

Made for Each Other

அப்படிங்கறீங்க

sakthi said...

நட்புடன் ஜமால் said...

எனக்கு தெரியும் நீ
என்னை விட அழகன் என்று
உன் அருகில் இருப்பதால் நான் அழகி ஆனேன்!!!]]

இது தான் அழகென்பது

ஆம் அண்ணா இது தான் அழகு சந்தேகம் என்ன

sakthi said...

இய‌ற்கை said...

Made for each other jodi inga onnu irukku...ellarum vangaaaaaaa:-))

ஆமா எல்லோரும் வந்து மொய் எழுதிட்டு போங்க

sakthi said...

Vidhoosh said...

very romantic.
vidhya

நன்றி வித்யா

sakthi said...

அ.மு.செய்யது said...

//என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டாய்
விலை மதிப்பில்லாத உன் காதல்
என்னிடம் இருக்கும் போது
விலை பெறகுடிய பரிசா நான் கேட்பேன்??//

இதே கேள்வியை முட்டாள்தனமாக நானும் கேட்டு வைத்து,வாங்கி கட்டி கொண்ட அனுபவமும் உண்டு.

அதெல்லாம் ஒரு காலம்......நல்லா இருக்குங்க கவிதை.( பழைய ஞாபகம் )

அது என்ன கதை பதிவா போடுங்க கும்மிடலாம்

ப்ரியமுடன் வசந்த் said...

ஆஹா அற்புதமான ஜோடி

வாழ்த்துக்கள் அக்காவுக்கும் மாம்ஸ்க்கும்

sakthi said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

//
என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டாய்
விலை மதிப்பில்லாத உன் காதல்
என்னிடம் இருக்கும் போது
விலை பெறகுடிய பரிசா நான் கேட்பேன்??//

இதை விட அழகாக சொல்ல முடியுமா அன்பை??

உங்கள் பதிவுகளில் இணைக்கப்பட்டுள்ள படங்கள் யாவும் அழகானவை :)

சக்தி, அருமை.

நன்றி செந்தில் தங்கள் உற்சாகமூட்டும் வருகைக்கு

sakthi said...

கபிலன் said...

ஆஹா...டச்சிங்க்..

நன்றி கபிலன்

sakthi said...

ஷ‌ஃபிக்ஸ் said...

அன்பு தொடருட்டும். வாழ்த்துக்கள் சக்தி.

நன்றி ஷ‌ஃபிக்ஸ்

sakthi said...

Anbu said...

ரைட்டு...நடத்துங்க,,,

கண்டிப்பா அன்பு

sakthi said...

தமிழரசி said...

காதல் பொழியும் கார் மேகமே கருத்தே இருக்கட்டும் உன் மேகம் என்றும் காதலில்....

நன்றி சகோதரி

sakthi said...

தியாவின் பேனா said...

காதல் கவிதை அழகு

நன்றி தியா

Sanjai Gandhi said...

//சிறு பெண்ணாக உன் கையில்
ஒப்படைக்கபட்டேன்//

அப்போவேவா? :)

பாலா said...

மீள் பதிவு?????????????????????

வெற்றி-[க்]-கதிரவன் said...

மாம்ஸ் ரொம்ப கொடுத்துவைத்தவர்...... -:)

Unknown said...

hi,ur feelings are realy superbbb

அப்துல்மாலிக் said...

முதல் கவிதையா????

காதல் வழிகிறது ஒவ்வொரு வரிகளிலும்

எளிமையான அன்பை மேம்மடுத்தப்பட்ட வரிகள்

அப்துல்மாலிக் said...

//என்னை விட அழகன் என்று
உன் அருகில் இருப்பதால் நான் அழகி ஆனேன்!!!
//

அழகை சொல்வதில் பொய்யும் உண்டோ...

இருந்தாலும் அழகாக வரியில் அழகை அழகா சொல்லிட்டீங்க‌

அப்துல்மாலிக் said...

//விலை மதிப்பில்லாத உன் காதல்
என்னிடம் இருக்கும் போது
விலை பெறகுடிய பரிசா நான் கேட்பேன்??
//

நகை, புடவை யெல்லாம் வாங்கி கேட்கலியா

தப்பிச்சார்??????

பீர் | Peer said...

முதல் கவிதை, முற்றிலும் அழகு.

அடுத்தடுத்த கவிதைகளில் இதைவிட அழகாக சொல்லியிருப்பீர்களா? என்ற எண்ணம் வருகிறது.

வாழ்த்துக்கள்

SUMAZLA/சுமஜ்லா said...

//எனது பனி காலத்தில்
உனது பார்வை ஒன்றே போர்வையாக//

காய்த்த காதல் கனிந்து போனது இங்கு!

sakthi said...

கீதா ஆச்சல் said...

நல்லா இருக்கு...அருமை...

நன்றி கீதா

sakthi said...

ஹேமா said...

சக்தி உங்க மனசை அப்பிடியே கொட்டி வச்சிருக்கீங்க.
அள்ளி எடுதிட்டாரா !

எடுக்காம இருப்பாரா என்ன???

ஹேமா

நன்றி தங்களின் வருகைக்கு

sakthi said...

திகழ் said...

அழகான வரிகள்

நன்றி திகழ்

sakthi said...

seemangani said...

//உன்னை தொடர்ந்து முகம் திருப்புவதால்
நான் சூரிய காந்தி ஆனேன் !!!//

அழகான கவிதை....அழகான வரிகள்.....
மிச்சமில்லாமல் ரசித்து படித்தேன்...
வாழ்த்துகள்...

நன்றி சீமான்

sakthi said...

கதிர் - ஈரோடு said...

நல்லா காதலிக்றீங்க சக்தி

ஹ ஹ ஹ

நன்றி கதிர்

sakthi said...

jerin said...

அருமையான கவிதை.........
கலக்கிடீங்க போங்க!!!!!!!!!!!!!!

நன்றி ஜெரின் தங்கள் முதல் வருகைக்கு

sakthi said...

பிரியமுடன்...வசந்த் said...

ஆஹா அற்புதமான ஜோடி

வாழ்த்துக்கள் அக்காவுக்கும் மாம்ஸ்க்கும்

நன்றி சகோதரா

sakthi said...

SanjaiGandhi said...

//சிறு பெண்ணாக உன் கையில்
ஒப்படைக்கபட்டேன்//

அப்போவேவா? :)

ஆம் சஞ்சய் அண்ணா

அப்பவே

அவ்வ்வ்வ்வ்வ்

நன்றி தங்கள் வருகைக்கு

sakthi said...

பாலா said...

மீள் பதிவு?????????????????????

ஆமா பாலா

sakthi said...

[பி]-[த்]-[த]-[ன்] said...

மாம்ஸ் ரொம்ப கொடுத்துவைத்தவர்...... -:)

நன்றி பித்தானந்தா

sakthi said...

p said...

hi,ur feelings are realy superbbb

நன்றி சகோ

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

முதல் கவிதையா????

காதல் வழிகிறது ஒவ்வொரு வரிகளிலும்

எளிமையான அன்பை மேம்மடுத்தப்பட்ட வரிகள்

ஆமா அண்ணா முதல் கவிதை இது தான்

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

//என்னை விட அழகன் என்று
உன் அருகில் இருப்பதால் நான் அழகி ஆனேன்!!!
//

அழகை சொல்வதில் பொய்யும் உண்டோ...

இருந்தாலும் அழகாக வரியில் அழகை அழகா சொல்லிட்டீங்க‌

நன்றி அபு அண்ணா

இத்தனை நாளும் எனை ஊக்கப்படுத்திய உங்கள் அனைவருக்கும் நன்றி

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

//விலை மதிப்பில்லாத உன் காதல்
என்னிடம் இருக்கும் போது
விலை பெறகுடிய பரிசா நான் கேட்பேன்??
//

நகை, புடவை யெல்லாம் வாங்கி கேட்கலியா

தப்பிச்சார்??????


ஆமா தப்பிச்சார்

நகை புடவை எல்லாம் தனி கணக்கு அபு அண்ணா

sakthi said...

பீர் | Peer said...

முதல் கவிதை, முற்றிலும் அழகு.

அடுத்தடுத்த கவிதைகளில் இதைவிட அழகாக சொல்லியிருப்பீர்களா? என்ற எண்ணம் வருகிறது.

வாழ்த்துக்கள்

நன்றி பீர்

sakthi said...

SUMAZLA/சுமஜ்லா said...

//எனது பனி காலத்தில்
உனது பார்வை ஒன்றே போர்வையாக//

காய்த்த காதல் கனிந்து போனது இங்கு!

நன்றி சுமஜ்லா

gayathri said...

என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டாய்
விலை மதிப்பில்லாத உன் காதல்
என்னிடம் இருக்கும் போது
விலை பெறகுடிய பரிசா நான் கேட்பேன்??

hey super da

கலையரசன் said...

நீங்க எழுதின முதல் கவிதையா?
ஆரம்பத்திலேயே அடிச்சி ஆடியிருக்கீங்க போல..அட்டகாசம்..

ஆ.ஞானசேகரன் said...

//என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டாய்
விலை மதிப்பில்லாத உன் காதல்
என்னிடம் இருக்கும் போது
விலை பெறகுடிய பரிசா நான் கேட்பேன்??//

முதல் கவிதையே கலக்கலா இருக்கு வாழ்த்துகள் சக்தி

சப்ராஸ் அபூ பக்கர் said...

அழகான கவி வரிகள்.....

அருமையாக இருந்தது... வாழ்த்துக்கள் ஷக்தி.....

Information said...

நற்கவிதை

SUFFIX said...

உங்கள் புதிய Profile படத்தின் ஓவியம் நல்லா இருக்கு

பா.ராஜாராம் said...

எவ்வளவு அழகாய் இருக்குடா சக்திம்மா.இப்படியே நிறைஞ்சு இருங்கடா!--ராஜாண்ணா.

சீமான்கனி said...

ஒரு நிமிஷம் இந்த பக்கம் வந்துட்டு போங்க
http://ganifriends.blogspot.com/2009/08/blog-post_30.html

kanagu said...

கவிதையோட ஒவ்வொரு வரியுமே சூப்பர் அக்கா :)))

அருமையான கவிதை.. :)

இந்த மீள் பதிவு அப்டினா என்ன???

sakthi said...

என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டாய்
விலை மதிப்பில்லாத உன் காதல்
என்னிடம் இருக்கும் போது
விலை பெறகுடிய பரிசா நான் கேட்பேன்??

hey super da


நன்றி காயா

sakthi said...

கலையரசன் said...

நீங்க எழுதின முதல் கவிதையா?
ஆரம்பத்திலேயே அடிச்சி ஆடியிருக்கீங்க போல..அட்டகாசம்..

தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி கலை

sakthi said...

ஆ.ஞானசேகரன் said...

//என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டாய்
விலை மதிப்பில்லாத உன் காதல்
என்னிடம் இருக்கும் போது
விலை பெறகுடிய பரிசா நான் கேட்பேன்??//

முதல் கவிதையே கலக்கலா இருக்கு வாழ்த்துகள் சக்தி

நன்றி சேகரன்

sakthi said...

சப்ராஸ் அபூ பக்கர் said...

அழகான கவி வரிகள்.....

அருமையாக இருந்தது... வாழ்த்துக்கள் ஷக்தி.....

நன்றி சப்ராஸ் அபூ பக்கர்

sakthi said...

Information said...

நற்கவிதை

நன்றி தகவல்

sakthi said...

ஷ‌ஃபிக்ஸ் said...

உங்கள் புதிய Profile படத்தின் ஓவியம் நல்லா இருக்கு

நன்றி சகோ ஆனால் அதற்கு நன்றி கூகிள்க்கு தான் சொல்லனும்

sakthi said...

பா.ராஜாராம் said...

எவ்வளவு அழகாய் இருக்குடா சக்திம்மா.இப்படியே நிறைஞ்சு இருங்கடா!--ராஜாண்ணா.

ராஜாண்ணா தங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றி
என்றும் மறவேன் முகமறிய இந்த தங்கையிடம் நீங்கள் அனைவரும் கொண்டிருக்கும் நேசத்தை.....

sakthi said...

kanagu said...

கவிதையோட ஒவ்வொரு வரியுமே சூப்பர் அக்கா :)))

அருமையான கவிதை.. :)

இந்த மீள் பதிவு அப்டினா என்ன???

அது ஒண்ணும் இல்லை கனகு புதுசா எழுத வக்கில்லைன்னா பழைய பதிவை திரும்பவும் போட்டா அதற்கு பேர் தான் மீள்பதிவு

நன்றி சகோதரா

சத்ரியன் said...

//என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டாய்
விலை மதிப்பில்லாத உன் காதல்
என்னிடம் இருக்கும் போது
விலை பெறகுடிய பரிசா நான் கேட்பேன்??//

சக்தி,

அவர் உண்மையாகவே கொடுத்து வைத்தவர்தான் (காதலை!). உங்களுடையதும் சரி பாதி முதலீடு (காதல் தான் )அதில் இருக்குமே.

அனுபவக் கவிதை!


தட்டச்சுப் பிழை.
"பெறகுடிய" என்னும் சொல் "பெறக்கூடிய" என்றிருக்க வேண்டும்.

வால்பையன் said...

//சிறு பெண்ணாக உன் கையில்
ஒப்படைக்கபட்டேன்//

பால்யவிவாகம் தடை செய்யப்பட்டு விட்டதே!

sakthi said...

சத்ரியன் said...

//என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டாய்
விலை மதிப்பில்லாத உன் காதல்
என்னிடம் இருக்கும் போது
விலை பெறகுடிய பரிசா நான் கேட்பேன்??//

சக்தி,

அவர் உண்மையாகவே கொடுத்து வைத்தவர்தான் (காதலை!). உங்களுடையதும் சரி பாதி முதலீடு (காதல் தான் )அதில் இருக்குமே.

அனுபவக் கவிதை!


தட்டச்சுப் பிழை.
"பெறகுடிய" என்னும் சொல் "பெறக்கூடிய" என்றிருக்க வேண்டும்.

அது முதல் கவிதை சில பிழைகள் இருக்ககூடும்

திருத்திக்கொள்கிறேன்

நன்றி தங்கள் வருகைக்கு

sakthi said...

வால்பையன் said...

//சிறு பெண்ணாக உன் கையில்
ஒப்படைக்கபட்டேன்//

பால்யவிவாகம் தடை செய்யப்பட்டு விட்டதே!

நன்றி வால்பையன்

Suresh Kumar said...

உங்கள் முதல் கவிதையா ? கலக்கல் காதலை கலக்கலா யதார்த்தமா உணர்ந்து சொல்லியிருக்கீங்க .

SK said...

sari rightu :-)

Anonymous said...

wow..wonderful...

cheers,
ammu.

Anonymous said...

!!!! இத்தனை ஆச்சிரியங்கள் நீங்கள் பட்டப்பின்பும் அவன் அற்புதத்தை கூறி புரியவைக்க வேண்டுமா... சொற்க்களை பின் தள்ளும் உணர்வுகள்...

பின்றீங்க boss

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

சக்தி காதலை அழகாக மென்மையா சொல்லியிருக்கீங்க இப்படி ஒரு பெண் மனைவியாக கிடைக கொடுத்து வைத்திருக்க வேண்டும்