Tuesday, August 31, 2010

எதிர்வரும் நாளெமதில்!!!!


நிசப்தம் பூக்கும் இரவொன்றில்
வனாந்திரப்பேரமைதியில்
இலக்குகளற்றவெற்றுச்சுவடுகளில்
உறக்கமற்று அலைகிறேன்
வசீகரமிழந்து......

அடுத்தொன்று
இன்னொன்று
மற்றொன்று
பிறிதொன்று
எனத்தேடித்தளர்ந்து.....

தன்னம்பிக்கை தத்தளிக்க
தோல்வித்தருணங்கள் சூழ்ந்திட
மனம் பிறழ்ந்து
உளறிந்திரிந்து
மிழற்றுகிறேன்மூர்க்கமாய்....
எதிர்வரும் நாள் எமதில்
இற்றிடப்போகும்சிறகின்
நிலைநினைந்து.....

Thursday, August 26, 2010

வேண்டும் விடுதலை!!!!


யார் சொல்வது நாம்
அடிமைத்தளையிலிருந்து
விடுபட்டுவிட்டோமென.....

அழுகிச்சிதைந்து
ஆணிவேரில் புற்றேறி
அருவெறுப்பாய் நிற்கின்றது
நம் நாட்டு அரசியல்.....

சொந்தமக்களை சோற்றுக்கு
அலையவிட்டுவிட்டு அன்னியனை
ஆளவைத்து அழகு பார்க்கின்றோம்
அதிகாரங்களுக்கு அடிமைப்பட்டு....

விதேசிகளை துரத்திவிட்டதாய்
பீற்றிக்கொண்ட சுதேசிகள் இன்று
விதேசி பொருட்களுக்கு அடிமையாய்....

ஜாதியென்றும் மதமென்றும்
இனமென்றும் மொழியென்றும்
நமை நாமே பகுபடுத்தி திரிகின்றோம்
மூளையிருந்தும் அடிமையாய்.....

போதும் இந்தியனேபோதும்
நிலைகெட்டு மானம்கெட்டு
அலைந்து திரிந்தது போதும்
புறப்பட்டு வா
புதிய பாரதம் அமைப்போம்
உண்மையான சுதந்திர
காற்றை சுவாசித்திற்போம்..

Thursday, August 19, 2010

சரியும் இரவு!!!


மெல்ல இரவு சரிந்து
மேகம் தரையிறங்கியது....

மண் தரையிலோ
மழையின் கால்தடங்கள்....

மஞ்சள் வைரங்களாய்
மவுனமொழி பேசும் நட்சத்திரங்கள்...

இவையணைத்தையும்
இயல்பான ரசனையுடன் குழைந்து நான்
இயற்கையுடன் ஒன்றிட்டேன்....

காற்றும் மழையும்
தென்றலும் தூரலும்
பனியும் குளிரும் வாடையுமாய்
எனை தழுவிச்சென்றது அருவி....

எரியும் இருளினூடாக
அருவி நீரோடு மிதந்தழிந்தது
என் இன்ன பிறவும்!!!!

Tuesday, August 10, 2010

இதயம் ரணமானது


திக்கற்ற வெளியில்
திசையறியாது

தவிக்கின்றேன் தோழி
திரும்பி பார்த்தால்

உற்றவள் நீயும் இல்லை
உறவினரும் இல்லை.....

கண்ணில் உனை வைத்தால்
கண்ணீருடன் கரைந்திடுவாய்

என எண்ணி உன்னை
என் இதயத்தில் அன்றோ இருத்தினேன்
என் இதயத்தின் ஓசை கேட்டு

இதமாய் நீ உணர்வாய் என
இன்று இதயமும் ரணமானது
இதுவே நிஜமானது.....

செத்துவிட்ட என் மனதை இனி
சுடுகாட்டு தீயா சுட்டுவிடும்...

Sunday, August 1, 2010

யாருமற்ற வான் பொய்கையில் வெறுமையுற்ற நிலா !!!


அவள் வாழ்வில்
மகிழ்ச்சி நிறைந்த
வார்த்தைகள்
அனைத்தையும் ஒருவன்
களவாடிசென்று விட!!!!

அக்கினிப்பூவாய் தகிக்கும் மஞ்சத்தில்
தோகையெனத் துவள்கிறாள்
அமைதியின் கரிய காலடியில்
மனுஷர்களின் பேராசையினால்
காயப்பட்ட பூஞ்சிறகாய் அவள் மனம்!!!!

இதுவரை அழுந்தித் துயர் தரும்
வலிகளை பிடுங்கியெறிய
அவள் ஓடிக்கொண்டிருக்கிறாள்
பாத மணற்கற்றைகள் எரிய!!!!

கானகத்தின் நீட்சி கொண்ட
உயிர்த்தாவரத்தின் மலர்க்கும்
சொல்லொன்றில்
அரும்பித்தழைக்கவேண்டும்....

யாருமற்ற வான் பொய்கையில்
வெறுமையுற்ற நிலாவின்
மென்னகையின் இலைகள்!!!!