Saturday, June 16, 2012

என்ன தவம் செய்தனை !!!!

கார்த்திக் நேற்று இரவு பேனாவும் பேப்பருமாக அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தான் . என்ன தங்கம் எழுதறே என கேட்டதுக்கு உனக்கு தான் மா எழுதறேன்னு சொன்னான். அப்படியா என்ன எழுதறேன்னதும். கவிதை மா என்றான்.
பயங்கர அதிர்ச்சியா இருந்தது அதுக்குள்ளயா????? அப்படின்னு அதிர்ச்சியோட சரி நீ என்ன எழுதியிருக்கே படிச்சி காட்டு என்றேன்....

அம்மா உன்னிய எனக்கு நெம்ப பிடிக்கும்
உன் பக்கத்துல நான் எப்பவும் இருக்கணும் அம்மா
உன் கழுத்தை கட்டிப்பிடிச்சுட்டே நான் தூங்கணும்
உன் மடியில எப்பவும் நான் தான் உட்கார்ந்துக்கணும்
நீ நான் கேட்கறது எல்லாம் வாங்கி குடுக்கறே அம்மா
நீ ரொம்ப நல்ல அம்மா

ஆனால் இந்த பாலாஜி இருக்கானே அவன் ஒரு லூசு மா
அவனுக்கு அப்பாவை தான் பிடிக்குமாம்.
அவன் அப்பாவை போய் கட்டிப்பிடிச்சுட்டு தூங்கறான் மா
அவனுக்கு உன்னை விட அப்பாவை தான் பிடிக்கும்ங்கறான் மா

எல்லாம் சரி மா ஆனால் நீ அப்போ அப்போ அடிக்கறே
அது மட்டும் எனக்கு பிடிக்கல அப்போ உன்னிய
அப்பாகிட்ட சொல்லி அடி வாங்கி குடுக்கணும் போல இருக்கு

இதான் எங்க வீட்டு வாலு எனக்கு எழுதின கவிதை ??????

::)))))

இப்பவே இப்படின்னா பின்னாட்களில் எப்படியோ!!!!!!!!!!!!!!!!


( முன்பு கூகிள் பஸ் ல எழுதியது )