Monday, April 4, 2011

பிரியம் பொதிந்த சொற்களால்......


நித்திலப்புன்னகை சுடர் வீசிட
எனை நித்தமும் கொஞ்சிடும்
சித்திரப்பூவே.....


கருத்தொருமித்த காதலின்
பரிசாய் என் கருவறையில்
கனிந்திட்ட கனியமுதே....

நின் முகத்தினெழிலிங்கு இயம்பிட
முயன்று முத்தமிழும் தோற்றிட்ட
அற்றைய பொழுதில் அகமகிழ்ந்தேன்.....

மெல்லிதழாலும் பூங்கரத்தாலும்
இன்பப்பொழினிடையில்
உயிரினமுதம் பொழிகையில்
என் சிந்தை திறை கொடுத்தேன்....

என் புலன் வருத்தி இப்புவியில்
நீ பாதம் பதித்த இந்நாளில்
நமையாளும் ஈசனிடம்
நலம் பல உனை சார்ந்திட
நல்லருள் செய வேண்டுகிறேன்....

இன்று என் இளைய மகன் கார்த்திகேயனின் பிறந்த நாள்
வாழ்த்துங்கள் நண்பர்களே ........