Monday, April 4, 2011

பிரியம் பொதிந்த சொற்களால்......


நித்திலப்புன்னகை சுடர் வீசிட
எனை நித்தமும் கொஞ்சிடும்
சித்திரப்பூவே.....


கருத்தொருமித்த காதலின்
பரிசாய் என் கருவறையில்
கனிந்திட்ட கனியமுதே....

நின் முகத்தினெழிலிங்கு இயம்பிட
முயன்று முத்தமிழும் தோற்றிட்ட
அற்றைய பொழுதில் அகமகிழ்ந்தேன்.....

மெல்லிதழாலும் பூங்கரத்தாலும்
இன்பப்பொழினிடையில்
உயிரினமுதம் பொழிகையில்
என் சிந்தை திறை கொடுத்தேன்....

என் புலன் வருத்தி இப்புவியில்
நீ பாதம் பதித்த இந்நாளில்
நமையாளும் ஈசனிடம்
நலம் பல உனை சார்ந்திட
நல்லருள் செய வேண்டுகிறேன்....

இன்று என் இளைய மகன் கார்த்திகேயனின் பிறந்த நாள்
வாழ்த்துங்கள் நண்பர்களே ........

40 comments:

எல் கே said...

என் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க சக்தி

எல் கே said...

என் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க சக்தி

sakthi said...

நன்றி எல் கே வாழ்த்திற்கு :)

"உழவன்" "Uzhavan" said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள :-)

தமிழ் உதயம் said...

பிறந்த நாள் வாழ்த்து கவிதை. குழந்தைக்கு வாழ்த்துகள்.

பா.ராஜாராம் said...

கார்த்திக் குட்டீஸ்!

பிறந்த நாள் வாழ்த்துகள்டா!

சக்தி,

செம cute, பசங்க! (நல்லவேளை, அத்தான் மாதிரி போல பசங்க) :-)

sakthi said...

நன்றி உழவரே!!!

sakthi said...

நன்றி தமிழ் உதயம்

sakthi said...

ராஜா அண்ணா

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

ஆமா அண்ணா பசங்க அவுங்க அப்பா மாதிரியே தான் ::))))

Anonymous said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்திக்! இறைவன் அருள் எப்போதும் உடன் இருக்கட்டும். :)

கவி அழகன் said...

நித்திலப்புன்னகை சுடர் வீசிட
எனை நித்தமும் கொஞ்சிடும்
சித்திரப்பூவே..

அருமையான தொடக்கம்

Chitra said...

கருத்தொருமித்த காதலின்
பரிசாய் என் கருவறையில்
கனிந்திட்ட கனியமுதே....


...Simply Superb!

Convey our birthday wishes to your little prince!!!! :-)

ஹேமா said...

செல்லத்துக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் !

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உங்கள் மகனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க சக்தி. கவிதையும் அழகு சக்தி

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...
This comment has been removed by the author.
sakthi said...

நன்றி பாலாஜி சரவணா :)

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

பிரியம் பொதிந்த சொற்களால் நீங்கள் தீட்டிய கவி வாழ்த்தை விட வேறுதேவை இல்லை.உங்களின் அவவிர்க்காக
புவிதனில் அவதரித்த கார்த்திகை மைந்தன் போல்
அன்பு காதலின்பரிசை கிடைத்திட்ட செல்வம்
கார்த்திகேயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் மென் மேலும் வரந்து சிறக்க எல்லாம் வல்ல ஈ சனை வேண்டுகிறேன் subburajpiramu@gmail.com

sakthi said...

நன்றி யாதவன்

sakthi said...

Chitra said...
கருத்தொருமித்த காதலின்
பரிசாய் என் கருவறையில்
கனிந்திட்ட கனியமுதே....


...Simply Superb!

Convey our birthday wishes to your little prince!!!! :-)


நன்றி சித்ரா

sakthi said...

ஹேமா said...
செல்லத்துக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் !

நன்றி ஹேமா வாழ்த்திற்கு

sakthi said...

தோழி பிரஷா said...
உங்கள் மகனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க சக்தி. கவிதையும் அழகு சக்தி


நன்றி தோழி பிரஷா

sakthi said...

நன்றி இன்பம் துன்பம்

R. Gopi said...

உங்கள் செல்லத்திற்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!

கவிதை சூப்பர்

கீதமஞ்சரி said...

தாலாட்டுப் பாடிய தாய்த்தமிழ்
இன்று பாராட்டுக் கவிபாட...
பாரெங்கும் வியாபித்த வலைப்பூ நட்புகள்
பல்லாண்டு வாழ வாழ்த்துப்பூத்தூவ...
நானும் அன்போடு வாழ்த்துகிறேன்,
சின்னஞ்சிறு சித்திரப்பூவை!
பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்திக்.

அப்துல்மாலிக் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கார்த்திக் :))))))

போளூர் தயாநிதி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள

logu.. said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

சுசி said...

ச்செல்லக்குட்டி என்றும் சீரோடும் சிறப்போடும் வாழ பிள்ளையார் அருள் கிடைக்கட்டும் :)

sakthi said...

Gopi Ramamoorthy said...
உங்கள் செல்லத்திற்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!

கவிதை சூப்பர்

நன்றி கோபி

sakthi said...

கீதா said...
தாலாட்டுப் பாடிய தாய்த்தமிழ்
இன்று பாராட்டுக் கவிபாட...
பாரெங்கும் வியாபித்த வலைப்பூ நட்புகள்
பல்லாண்டு வாழ வாழ்த்துப்பூத்தூவ...
நானும் அன்போடு வாழ்த்துகிறேன்,
சின்னஞ்சிறு சித்திரப்பூவை!
பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்திக்.

நன்றி கீதா முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்:)

sakthi said...

அப்துல்மாலிக் said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கார்த்திக் :))))))

நன்றி அபு அண்ணா

sakthi said...

போளூர் தயாநிதி said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள


நன்றி போளூர் தயாநிதி

sakthi said...

logu.. said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

நன்றி லோகு

sakthi said...

சுசி said...
ச்செல்லக்குட்டி என்றும் சீரோடும் சிறப்போடும் வாழ பிள்ளையார் அருள் கிடைக்கட்டும் :)

நன்றி சுசி

தமிழ் said...

/நின் முகத்தினெழிலிங்கு இயம்பிட
முயன்று முத்தமிழும் தோற்றிட்ட
அற்றைய பொழுதில் அகமகிழ்ந்தேன்...../

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

ஆனந்தி.. said...

அட...என் வாழ்த்து தான் தாமதமா...பரவாயில்லை..மருமகன் கார்த்திக்கு இந்த மதுரைகார அத்தையின் இனிய முத்தங்களும்,வாழ்த்துகளையும் அப்படியே கொடுத்திருங்க சக்தி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

நண்பர் கோபி அவர்களின் வலைப்பூவில் சென்ற நான் அங்கு தற்செயலாக, தங்களின் பின்னூட்டம் பார்த்து, இன்று முதன் முதலாக உங்கள் வலைப்பூவினுள் நுழைந்து பார்த்தேன்.

"பிரியம் பொதிந்த சொற்களால்......" கவிதை முழுவதும் அருமையே என்றாலும் என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:

//கருத்தொருமித்த காதலின் பரிசாய் என் கருவறையில் கனிந்திட்ட கனியமுதே....//

வாழ்த்துக்கள் கவிதை படைத்த தங்களுக்கும், பிறந்த நாள் கண்ட தங்கள் செல்வன் கார்த்திகேயனுக்கும்.

அன்புடன் vgk

Thenammai Lakshmanan said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் குட்டிக்கு..:)

லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா அட்வான்ஸ்டா அடுத்த பிறந்த நாளுக்குள்ள சொல்லிட்டம்ல..:)

மாலதி said...

பிறந்த நாள் வாழ்த்து கவிதை. குழந்தைக்கு வாழ்த்துகள்.

சத்ரியன் said...

கார்த்தி -க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரியப்படுத்திருங்க சக்தி.

(ஊருக்கு போயிட்டு வந்ததால வலைப்பக்கம் வரமுடியாம போயிடுச்சி)