Tuesday, March 17, 2009

ஊமையின் கனவு

என் கண்ணீர் கண்ட பின்பும்
உன் மேல் நான் கொண்ட காதல்
உனக்கு புரியவில்லையா பெண்ணே
உன் நினைவுகளால் நான் காற்றில் கரையும்
கற்பூர பொம்மையானேன்

எனக்கு தெரியும் உன்னிடத்தில்
என் நினைவு ஒன்று கூட இல்லையென‌
என்னிடத்தில் உன் நினைவை
தவிர வேறு ஒன்றும் இல்லை

அடைத்து கொண்டு இருக்கும் மூங்கில் சாரமாகும்
வெறுமையான மூங்கில் புல்லாங்குழலாகும்
என்றால் என் ஏந்திழையாள்

உன் நினைவுகளால் என் மனம் அடைபட்டிருக்கிறது பெண்ணே
நான் சாரமாவேனா புல்லாங்குழலாவேனா
என்பது உன்னிடத்தில் அல்லவா உள்ளது

என் காதல் உன்னிடம் சொல்லபடாமலே
உன் செவி எட்டாமலே
ஊமை கண்ட கனாவாகிடுமோ
என அஞ்சுகிறேன் அஞ்சுகமே

11 comments:

நட்புடன் ஜமால் said...

\\எனக்கு தெரியும் உன்னிடத்தில்
என் நினைவு ஒன்று கூட இல்லையென‌
என்னிடத்தில் உன் நினைவை
தவிர வேறு ஒன்றும் இல்லை\\

அற்புதம்

நட்புடன் ஜமால் said...

\\என் காதல் உன்னிடம் சொல்லபடாமலே
உன் செவி எட்டாமலே
ஊமை கண்ட கனாவாகிடுமோ
என அஞ்சுகிறேன் அஞ்சுகமே\\

அழகான வார்த்தைகளில் அழகா சொன்னீங்க

Unknown said...

என் காதல் உன்னிடம் சொல்லபடாமலே
உன் செவி எட்டாமலே
ஊமை கண்ட கனாவாகிடுமோ
என அஞ்சுகிறேன் அஞ்சுகமே
romba nallaa irukku shakthi madem

brave heart U.A.E

sakthi said...

நன்றி ஜமால்
நன்றி சக்தி

பாலா said...

ஏந்திலையாள்

"lai" thavarentru ninaikkiren "zhai"entru vara vendu mentru .
bala

sakthi said...

nandri bala

sakthi said...

nandri bala

புதியவன் said...

//உன் நினைவுகளால் நான் காற்றில் கரையும்
கற்பூர பொம்மையானேன்//

உவமை அழகு...

புதியவன் said...

//எனக்கு தெரியும் உன்னிடத்தில்
என் நினைவு ஒன்று கூட இல்லையென‌
என்னிடத்தில் உன் நினைவை
தவிர வேறு ஒன்றும் இல்லை//

மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...

sakthi said...

புதியவன் said...

//எனக்கு தெரியும் உன்னிடத்தில்
என் நினைவு ஒன்று கூட இல்லையென‌
என்னிடத்தில் உன் நினைவை
தவிர வேறு ஒன்றும் இல்லை//

மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...

thank u
thank u

sakthi said...

//உன் நினைவுகளால் நான் காற்றில் கரையும்
கற்பூர பொம்மையானேன்//

உவமை அழகு...
2 naal yosichu eluthinathunga