Monday, May 2, 2011

பிரியம் சுமக்கும் சொற்களால்..... (பகுதி2)



பிரியம் சுமக்கும் சொற்கள்

கொண்டு உனக்காய்

வடிப்பேன் ஒரு கவிதை....

மெளனக்கிடங்கில் மறைக்கப்பட்ட

மனதின் மென்மைகளை

அதில் பொதித்து

நீ அண்மிக்கையில்

பரிசளிப்பேன்

வெட்கம் குமிழ் குமிழாய்

உடைத்தபடி......

உன் நயன பாஷைகள் கண்டு

அந்தரங்கத்தில் மலரும்

சித்திரங்களின் மொழி

நானறிவேன்.....

மென்று விழுங்கும்

பார்வையுடன் நீ

என் முன் நிற்க

எல்லாம் புரிந்தும்

ஏதுமறியாச் சிறுமியாய்

நான் நிற்பேன்....

மறுதலிக்கப்படும் அன்பின் வலி

என்றும் நான் உணராதிருக்கவேண்டும்

என பிரார்த்தித்துக்கொண்டே.....


நன்றி : திண்ணை

18 comments:

தமிழ் உதயம் said...

காதல் - கவிதை பேசுகிறது... அழகாக.

Yaathoramani.blogspot.com said...

மறுக்கப்படும் அன்பின் வழி...
உணர்வு பூர்ணமான நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

sakthi said...

நன்றி தமிழ் உதயம்

sakthi said...

வாழ்த்துகளுக்கு நன்றி ரமணி

நட்புடன் ஜமால் said...

எளிமையாகவும் அழகாகவும் இருக்கின்றது

Anonymous said...

மிக அழகு சக்தி! மறுதலிப்பின் வலி எப்போதுமே கொடுமைதான்

sakthi said...

நன்றி ஜமால் அண்ணா

sakthi said...

நன்றி பாலாஜி சரவணா

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துகள் :-)

பா.ராஜாராம் said...

சக்தி, நல்லாருக்கு.

kowsy said...

பிரியம் சுமக்கும் சொற்கள், ஆழமான மனதின் உணர்வுகளைக் காட்டி நிற்கின்றன. வாழ்த்துக்கள்.

கீதமஞ்சரி said...

இத்தனை அன்பை மறுதலிக்க எந்த மனம்தான் முன்வரும்? அழகான கவிதை... காதலாய்! பிரமாதம் சக்தி.

ஹேமா said...

மறுதலிப்பெனத் தெரிந்துகொண்டே காதலிப்பது கொடுமை !

இராஜராஜேஸ்வரி said...

மறுதலிக்கப்படும் அன்பின் வலி

என்றும் நான் உணராதிருக்கவேண்டும்

என பிரார்த்தித்துக்கொண்டே.....
"பிரியம் சுமக்கும் சொற்களால்..... //
அருமை. வாழ்த்துக்கள்.

குமரை நிலாவன் said...

கவிதை அழகு

வாழ்த்துக்கள்

Anonymous said...

http://specialdoseofsadness.blogspot.com/


add tis movie blog to ur google reader...essays r written in simple english and very shortly...

add tis movie blog too in ur google reader

http://cliched-monologues.blogspot.com/

Sakthi said...

maruthalippin vali konjam kadinam thaan. hmmmmmm niraya ve kadinam thaan...

Suji... said...

மறுதலிக்கப்படும் அன்பின் வலி

என்றும் நான் உணராதிருக்கவேண்டும்

என பிரார்த்தித்துக்கொண்டே.....

fantastic. :)