Wednesday, July 14, 2010

நிலவின் ஒளியில் உருகும் சூரியன்!!!


சூரியன் தன் வீரியத்தை
தொலைத்த கோபத்தில்
சிவந்து தணிந்து
கொண்டிருந்த வேளையில்

ஒரு தர்க்கத்தின் முடிவில்
உயிரை கருக செய்யும்
திராவகத் துளிகளை
அவன் வார்த்தைகள் சிதற

கந்தகமிட்ட காகிதமாய்
வெந்து உலர்ந்தது நெஞ்சம்
உணர்வுகளின் மௌன மறுகல்
ஊமை மலர்களின் மௌன விகசிப்பாய்
மெல்ல மெல்ல குறைந்தது விசும்பல்கள்

சற்றே மனம் அடங்கி குளிர
வெட்க புன்னகை யொன்று இதழ்களில் தோன்றி
தேகம் முழுவதும் பரவ
விழி நாணேற்ற
முறிந்தது அவன் திமிர்

உள்ளே ஏதோ ஒன்று இற்று உருகிட அதன்
சாறாக கண்ணில் நீர்!!!!

22 comments:

Anonymous said...

:-) nice pa

விக்னேஷ்வரி said...

செம ஃபீல் சக்தி. நச்ன்னு இருக்கு.

ஈரோடு கதிர் said...

அந்த ஏதோ ஒன்று இற்று உருகும் தருணம்...

அடடா.. ஒரு பிரசவம் போல்

ப்ரியமுடன் வசந்த் said...

இம்ப்ரெஷினிஸம்,
எக்‌ஷ்பிரசனிஸம்,
க்யூபிஸம்,
டாடாயிஸம்,
சர்ரியலிஸம்,

இந்த கவிதையும் படமும் எதிலும் சேராத ரியலிஸம் இந்த கவிதை ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க சகோ

இறுமாப்பு முடிவில், கண்ணீர் தருமோ?

நேசமித்ரன் said...

அன்பு கனிந்த கனிவே சக்தி, ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி, இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி


:)

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு சக்தி!

சீமான்கனி said...

//கந்தகமிட்ட காகிதமாய்
வெந்து உலர்ந்தது நெஞ்சம்
உணர்வுகளின் மௌன மறுகல்
ஊமை மலர்களின் மௌன விகசிப்பாய்
மெல்ல மெல்ல குறைந்தது விசும்பல்கள்//

பொங்கி அடங்கும் புலர்வு...
அழகாய் அசத்தல் கவிதை சக்திக்கா.. வாழ்த்துகள்...

http://rkguru.blogspot.com/ said...

கவிதை சூப்பர்ரோ சூப்பர் வாழ்த்துகள்

Anonymous said...

ஆஅவ்வ்வ். சக்தியக்கா .... :)) ம்ம் நடத்து நடத்து

Jesica said...

கவிதை அருமை. வாழ்த்துக்கள்
www.mytitbits.com

அப்துல்மாலிக் said...

மீண்டும் வந்தாச்சா

ரொம்ப நாள் கழித்து ஒரு பதிவு

அருமை

gayathri said...

chellam kavithai nalla iruku ma

rompa naal kazichi mendum sakthi-in kavithai arumai

- இரவீ - said...

அருமை,அருமை.

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை. வாழ்த்துக்கள்

ஹேமா said...

கவிதை...உணர்வு கொதித்துப் பின் அடங்கையிலும் கண்ணீர்தானோ !

pinkyrose said...

உண்மையிலேயே நீங்க சக்தி தான்!

selventhiran said...

பொளக்கறீங்க பாஸூ...!

sakthi said...

நன்றி புனிதா
நன்றி விக்கி
நன்றி கதிர் அண்ணா

sakthi said...

நன்றி வசந்த்
நன்றி நேசன் அண்ணா
நன்றி ராஜாண்ணா
நன்றி சீமான்
நன்றி குரு

sakthi said...

நன்றி ஹேமா
நன்றி குமார்
நன்றி மயில்
நன்றி ஜெசிகா

sakthi said...

நன்றி அபு அண்ணா
நன்றி காயூ
நன்றி ரவீ

sakthi said...

நன்றி பிங்கி.
நன்றி செல்வா