Saturday, June 20, 2009

என்னை வினாக்குறியாக்கிய ஆச்சரியக்குறியே பதில் சொல்வாயா???


அன்னையின் வயிற்றில் சூல் கொண்டபோது
அறியவில்லை உனக்காக தான் உருவாகின்றேன் என்று!!!

மழலையாய் எனை கையிலேந்தி கொஞ்சி
மகிழ்ந்தபோது நீயும் அறியவில்லை
நான் தான் உன் துணையென்று!!!

காற்றை பார்த்ததும் இலைகள் படபடக்கும் ஆனந்தத்தில்
உனை கண்டதும் என்னிதயம் துடிக்கின்றதே அதே லயத்தில்!!!

ஏன் இந்த இதயவேதனையை
எனக்கு பரிசளித்தாய்??? என்னவனே!!!

உன் ஒவ்வொரு தீண்டலிலும்
எனக்குள் ஏதோ ஒரு நெருப்பை ஏற்றிவைக்கின்றாய்
எல்லா நரம்புகளையும் வியர்க்க வைக்கின்றாய்!!!

என்
அடிமனதை அகழ்ந்து அகழ்ந்து
ஆராய்ந்து பார்க்கின்றேன்
உன்னிடம் மயக்கம் கொள்ள காரணம்
என்னவென்று???

முகிலுக்குள் புகுந்து வெண்ணிலா வெளியேறும்
நேரத்திற்குள் என் உயிரை இப்புறம் துளைத்து
அப்புறம் வெளியேறும்
அசகாய அஸ்திவாரமான உன் விழிப்பார்வையிலா??? இல்லை

காற்றை கூட கிறக்கம் கொள்ளவைத்து என்
காதுகளை ஊடுருவும் உன்
காதல் மொழி பாஷைகளிலா???

எதை கண்டு உன்னிடம் மயக்கம் கொள்கிறேன்
எனை வினாக்குறியாக்கிய ஆச்சரியக்குறியே பதில் சொல்வாயா???


(பி.கு) இன்று பிறந்த நாள் காணும் என்னவனுக்காக ஒரு சின்ன கவிதை

56 comments:

Anonymous said...

உன்னவனுக்கு இந்த உடன்பிறப்பின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

வினோத் கெளதம் said...

ஓஹோ..அப்படியா விசேஷம்..வாழ்த்துக்கள் சொல்லிடுங்க..:))

தமிழ் said...

பிறந்த நாள் வாழ்த்துகள்

S.A. நவாஸுதீன் said...

சக்திக்கு வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற இந்த அண்ணனின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கவும் தமிழ்

Anonymous said...

நீ கருவிலிருந்து உருவான போதே காதல் கொண்டு உறவானது உரிமைச் சொல்லி உனதான உன்னவனை அணுஅணுவாய் ஆராதிக்கின்றாய் உன் ஆதிக்கத்தில் அரவணைத்து....வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது said...

அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,

//
காற்றை கூட கிறக்கம் கொள்ளவைத்து என்
காதுகளை ஊடுருவும் உன்
காதல் மொழி பாஷைகளிலா???//

இதை அவர் படிச்சாரா ??? சான்ஸே இல்ல...

தமிழரசியும் நீங்களும் ஒரு முடிவோட தான் எழுதறீங்க போல..

என்னமோ போங்க..

*இயற்கை ராஜி* said...

Akka..as usual super kavithai...avar padichitara?:-)


Convey my birthday wishes to him

*இயற்கை ராஜி* said...

treat eppo? rendu parum ready ya irunga...

naan eppo vennalum veettuku varuven treat poga:-))

ஆ.ஞானசேகரன் said...

//அன்னையின் வயிற்றில் சூல் கொண்டபோது
அறியவில்லை உனக்காக தான் உருவாகின்றேன் என்று!!!//

ஆக அருமை

ஆ.ஞானசேகரன் said...

//எதை கண்டு உன்னிடம் மயக்கம் கொள்கிறேன்
எனை வினாக்குறியாக்கிய ஆச்சரியக்குறியே பதில் சொல்வாயா??//

நல்ல காதல் க(வி)தை சக்தி.

பாராட்டுகள்

சப்ராஸ் அபூ பக்கர் said...

///ஏன் இந்த இதயவேதனையை
எனக்கு பரிசளித்தாய்??? என்னவனே!!!///

இந்த வரி ரொம்ப பிடித்திருந்தது.....

அப்படியே நம்ம ஏரியாவுக்குள்ளும் வாங்க.....(உங்க அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....)

(அது சரி, சொல்லிய காதலா??? சொல்லத் துடிக்கும் காதலா????லொள்ளு......)

sakthi said...

தமிழரசி said...

உன்னவனுக்கு இந்த உடன்பிறப்பின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

நன்றி தமிழரசியாரே

sakthi said...

வினோத்கெளதம் said...

ஓஹோ..அப்படியா விசேஷம்..வாழ்த்துக்கள் சொல்லிடுங்க..:))

கண்டிப்பாக வினோத்

sakthi said...

திகழ்மிளிர் said...

பிறந்த நாள் வாழ்த்துகள்

நன்றி திகழ்மிளிராரே...

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

சக்திக்கு வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற இந்த அண்ணனின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கவும் தமிழ்

கண்டிப்பாக சொல்லிவிடுகின்றேன் நவாஸ் அண்ணா

sakthi said...

தமிழரசி said...

நீ கருவிலிருந்து உருவான போதே காதல் கொண்டு உறவானது உரிமைச் சொல்லி உனதான உன்னவனை அணுஅணுவாய் ஆராதிக்கின்றாய் உன் ஆதிக்கத்தில் அரவணைத்து....வாழ்த்துக்கள்

வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழரசியாரே...

sakthi said...

அ.மு.செய்யது said...

அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,

//
காற்றை கூட கிறக்கம் கொள்ளவைத்து என்
காதுகளை ஊடுருவும் உன்
காதல் மொழி பாஷைகளிலா???//

இதை அவர் படிச்சாரா ??? சான்ஸே இல்ல...

தமிழரசியும் நீங்களும் ஒரு முடிவோட தான் எழுதறீங்க போல..

என்னமோ போங்க..

நன்றி செய்யது தம்பி

sakthi said...

இய‌ற்கை said...

Akka..as usual super kavithai...avar padichitara?:-)


Convey my birthday wishes to him

கண்டிப்பாக இயற்கை

sakthi said...

இய‌ற்கை said...

treat eppo? rendu parum ready ya irunga...

naan eppo vennalum veettuku varuven treat poga:-))

வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வருகைக்கு காத்திருக்கின்றேன்

sakthi said...

ஆ.ஞானசேகரன் said...

//அன்னையின் வயிற்றில் சூல் கொண்டபோது
அறியவில்லை உனக்காக தான் உருவாகின்றேன் என்று!!!//

ஆக அருமை

நன்றி ஞானசேகரன்

sakthi said...

ஆ.ஞானசேகரன் said...

//எதை கண்டு உன்னிடம் மயக்கம் கொள்கிறேன்
எனை வினாக்குறியாக்கிய ஆச்சரியக்குறியே பதில் சொல்வாயா??//

நல்ல காதல் க(வி)தை சக்தி.

பாராட்டுகள்

உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி....

sakthi said...

சப்ராஸ் அபூ பக்கர் said...

///ஏன் இந்த இதயவேதனையை
எனக்கு பரிசளித்தாய்??? என்னவனே!!!///

இந்த வரி ரொம்ப பிடித்திருந்தது.....

அப்படியே நம்ம ஏரியாவுக்குள்ளும் வாங்க.....(உங்க அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....)

(அது சரி, சொல்லிய காதலா??? சொல்லத் துடிக்கும் காதலா????லொள்ளு......)

தினமும் சொல்லாமல் சொல்லப்படும் காதல்....
சப்ராஸ் அபூ பக்கர்

நன்றி தங்கள் முதல் வருகைக்கு

ஆ.சுதா said...

உங்களவனுக்காக கவிதையோடு வாழ்த்துக்கள் ஈரக்காற்று வீசுகின்றது.

வாழ்த்துக்கள்,

கவிக்கிழவன் said...

நல்ல காதல் கவிதை சக்தி.இந்த வரி ரொம்ப பிடித்திருந்தது....
வாழ்த்துக்கள்....
Yathavan from Sri Lanka

பாலா said...

final touch super

ஆபிரகாம் said...

வாழ்த்துக்கள்!
ரசனையான வரிகள்!

ப்ரியமுடன் வசந்த் said...

சக்திக்கு பிறந்த நாள்வாழ்த்துக்கள்

என்ன பாக்குறீங்க

அது தானே அவர் பெயர்

sarathy said...

சக்தி என்னுடைய வாழ்த்துகளும் உங்களவருக்கு...

மொக்கை ராஜா said...

Very nice kavithai my wishes

அப்துல்மாலிக் said...

நீடூழி வாழ வாழ்த்துக்கள்

சக்தியின் கவிதை வரிகளில் எப்பொழுதும் சக்தி கிடைக்கும்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

மாம்ஸ்க்கு சொல்லிடுங்க சகோதரி

வேத்தியன் said...

வாழ்த்துகள் சொல்லிடுங்க...

kanagu said...

அழகான கவிதைங்க.. :)

சக்தி அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

thamizhparavai said...

தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.. உங்களவருக்கு எனது வாழ்த்துக்கள்...
உங்களின் அகத்திணைக் கவிதைக்குள் நுழைய விரும்பவில்லை..
முதல் படம் அருமை. எங்கிருந்து எடுத்தீர்கள்.. கண் பறிக்கும் வர்ணங்கள்... கொள்ளை அழகு... நல்ல ரசனை உங்களுக்கு...வாழ்த்துக்கள்...

gayathri said...

hai da 20 ennaku exam irunthuchi so anniku wish panna mudiyala annanu iniku intha thangachi wish pannanu sollidu da wish u happay birthday anna

sakthi said...

ஆ.முத்துராமலிங்கம் said...

உங்களவனுக்காக கவிதையோடு வாழ்த்துக்கள் ஈரக்காற்று வீசுகின்றது.

வாழ்த்துக்கள்,

நன்றி முத்து

sakthi said...

கவிக்கிழவன் said...

நல்ல காதல் கவிதை சக்தி.இந்த வரி ரொம்ப பிடித்திருந்தது....
வாழ்த்துக்கள்....
Yathavan from Sri Lanka

நன்றி கவிக்கிழவன்

sakthi said...

பாலா said...

final touch super

நன்றி பாலா

sakthi said...

ஆபிரகாம் said...

வாழ்த்துக்கள்!
ரசனையான வரிகள்!

நன்றி ஆபிரகாம்

sakthi said...

பிரியமுடன்.........வசந்த் said...

சக்திக்கு பிறந்த நாள்வாழ்த்துக்கள்

என்ன பாக்குறீங்க

அது தானே அவர் பெயர்

நன்றி பிரியமுடன் வசந்த்

sakthi said...

sarathy said...

சக்தி என்னுடைய வாழ்த்துகளும் உங்களவருக்கு.

நன்றி சாரதி

sakthi said...

P.Thilak said...

Very nice kavithai my wishes

நன்றி திலக்

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

நீடூழி வாழ வாழ்த்துக்கள்

சக்தியின் கவிதை வரிகளில் எப்பொழுதும் சக்தி கிடைக்கும்

நன்றி அபு அண்ணா

sakthi said...

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

மாம்ஸ்க்கு சொல்லிடுங்க சகோதரி

கண்டிப்பாக அண்ணா

sakthi said...

வேத்தியன் said...

வாழ்த்துகள் சொல்லிடுங்க

நன்றி வேத்தியரே..

sakthi said...

kanagu said...

அழகான கவிதைங்க.. :)

சக்தி அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

நன்றி கனகு

sakthi said...

தமிழ்ப்பறவை said...

தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.. உங்களவருக்கு எனது வாழ்த்துக்கள்...
உங்களின் அகத்திணைக் கவிதைக்குள் நுழைய விரும்பவில்லை..
முதல் படம் அருமை. எங்கிருந்து எடுத்தீர்கள்.. கண் பறிக்கும் வர்ணங்கள்... கொள்ளை அழகு... நல்ல ரசனை உங்களுக்கு...வாழ்த்துக்கள்...

நன்றி தமிழ்பறவை

sakthi said...

gayathri said...

hai da 20 ennaku exam irunthuchi so anniku wish panna mudiyala annanu iniku intha thangachi wish pannanu sollidu da wish u happay birthday anna

கண்டிப்பாக காயா

SUBBU said...

தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.. உங்களவருக்கு எனது வாழ்த்துக்கள்...

Subha said...

//அன்னையின் வயிற்றில் சூல் கொண்டபோது
அறியவில்லை உனக்காக தான் உருவாகின்றேன் என்று!!!//

அழகான வரிகள்!

sakthi said...

SUBBU said...

தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.. உங்களவருக்கு எனது வாழ்த்துக்கள்...

நன்றி சுப்பு

sakthi said...

சுபா said...

//அன்னையின் வயிற்றில் சூல் கொண்டபோது
அறியவில்லை உனக்காக தான் உருவாகின்றேன் என்று!!!//

அழகான வரிகள்!

நன்றி சுபா தங்களின் முதல் வருகைக்கு

நசரேயன் said...

சக்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், மறக்காம நல்ல ஹோட்டல் சாப்பாடு வாங்கி கொடுக்கவும்

"உழவன்" "Uzhavan" said...

வாழ்வில் எல்லா வளமும் காண உழவனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :-)

sakthi said...

நசரேயன் said...

சக்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், மறக்காம நல்ல ஹோட்டல் சாப்பாடு வாங்கி கொடுக்கவும்

கண்டிப்பாக நசரேயன் அண்ணா

sakthi said...

" உழவன் " " Uzhavan " said...

வாழ்வில் எல்லா வளமும் காண உழவனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :-)

நன்ரி உழவரே