Tuesday, November 16, 2010

எனக்கான கவசங்கள்....


எனக்கான கவசங்களுடன்
பிரசவிக்கப்பட்டிருக்கின்றேன்.....

உளைகிற மனம்
உள்ளே அழுதாலும்
வெளியே முகம் மலர்த்தும்
கலையை உங்களுக்காய் வளர்த்திருக்கிறேன்.....

எமை நொறுங்கச் செய்து
நெஞ்சில் நெறி கட்டி
கொண்டவை எவரிடத்தும்
பகிரப்படாது என்னுள்
புதையுண்டிருக்கும்.....

காலத்தின் சுழற்சியில்
கட்டுக்கள் கழன்றிட
சுதந்திர வானில்
சிறகசைப்பேன் வான்தொட்டு.....

என் மீள்வருகைக்காய்
நீங்கள் தவமிருக்கும் நாட்களை
மனத்திரையில் கண்டு களித்திட்டு.....

52 comments:

எல் கே said...

அனைவருமே எதோ ஒரு கவசத்துடன் வாழ்கிறோம்

தமிழ் உதயம் said...

உளைகிற மனம்
உள்ளே அழுதாலும்
வெளியே முகம் மலர்த்தும்
கலையை உங்களுக்காய் வளர்த்திருக்கிறேன்.....''///

எல்லோரும் இப்படி தான் இருக்கிறோம்

ரோகிணிசிவா said...

nalla irukunga , entha vari solla , ethai vida , -super totally

Anonymous said...

//என் மீள்வருகைக்காய்
நீங்கள் தவமிருக்கும் நாட்களை
மனத்திரையில் கண்டு களித்திட்டு.....//

அதானா சோதனை வைக்கமா வரமாட்டீங்களே..இப்பவாச்சும் வரீங்களே வாங்க..

நேசமித்ரன் said...

ம்ம் நல்ல முயற்சி . சக்தி . தொடர்க

sakthi said...

LK said...
அனைவருமே எதோ ஒரு கவசத்துடன் வாழ்கிறோம்

உண்மை தான்
நன்றி எல் கே தங்களின் கருத்திற்கு

sakthi said...

தமிழ் உதயம் said...
உளைகிற மனம்
உள்ளே அழுதாலும்
வெளியே முகம் மலர்த்தும்
கலையை உங்களுக்காய் வளர்த்திருக்கிறேன்.....''///

எல்லோரும் இப்படி தான் இருக்கிறோம்

நன்றி தமிழ் உதயம்

sakthi said...

ரோகிணிசிவா said...
nalla irukunga , entha vari solla , ethai vida , -super totally

நன்றி ரோகிணி தங்களின் ரசிப்பிற்கு

sakthi said...

தமிழரசி said...
//என் மீள்வருகைக்காய்
நீங்கள் தவமிருக்கும் நாட்களை
மனத்திரையில் கண்டு களித்திட்டு.....//

அதானா சோதனை வைக்கமா வரமாட்டீங்களே..இப்பவாச்சும் வரீங்களே வாங்க..

வராமல் போவேனா தமிழம்மா

sakthi said...

நேசமித்ரன் said...
ம்ம் நல்ல முயற்சி . சக்தி . தொடர்க

முயன்ற வரை முயல்கிறேன் நேசன் அண்ணா!!!

Unknown said...

மெல்லுணர்வின் வெளிப்பாடு.....அருமை

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

மிக அருமை தோழி....

logu.. said...

\\என் மீள்வருகைக்காய்
நீங்கள் தவமிருக்கும் நாட்களை
மனத்திரையில் கண்டு களித்திட்டு.....\\

Silar kanavugal ipdithan kalam ulla kalam varai manathiraiyodu mattume..

kavitha said...

அருமை அக்கா

சத்ரியன் said...

சக்தி,

கூண்டை உடைக்கனும் போல இருக்கே.

logu.. said...

amanga.. koondu nallalleyyyy..
mathunga..

Anonymous said...

நல்லா இருக்கு சக்தி

vinu said...

cuuuuuuuuuuuuuuuuute

வினோ said...

கவிதை அருமை சக்தி...

ஜெயசீலன் said...

மிகச் சிறப்பு...

ஆ.ஞானசேகரன் said...

வீட்டுப்புறா.... கூண்டில் அடைக்கப்பட்டது ஏன்?

ஆ.ஞானசேகரன் said...

//என் மீள்வருகைக்காய்
நீங்கள் தவமிருக்கும் நாட்களை
மனத்திரையில் கண்டு களித்திட்டு.....//


நல்லாயிருக்கு

Thenammai Lakshmanan said...

கவசம் அருமை சக்தி..

ஹேமா said...

சக்தி...கவசம் நல்லதொரு வார்த்தை.எதையும் மூடி மறைச்சிடலாம் !

THOPPITHOPPI said...

எமை நொறுங்கச் செய்து
நெஞ்சில் !நெறி கட்டி !

புதுமையான் வரிகள்

மே. இசக்கிமுத்து said...

கவசங்களால் கவலை வேண்டாம்,வெளியே வாருங்கள்!!

திபர்சன் said...

அழகிய கவிதை... வாழ்த்துக்கள்....

அன்புடன் மலிக்கா said...

அருமையாக இருக்கு தோழி

shammi's blog said...

unmaiyil ellarum kavasam poondu than prianthu irukkirom , sila samayam kavasam atru irukkavum byapadugirom

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///உளைகிற மனம்
உள்ளே அழுதாலும்
வெளியே முகம் மலர்த்தும்
கலையை உங்களுக்காய் வளர்த்திருக்கிறேன்//

உள்ளே எவ்ளோ சோகம் இருப்பினும், முக மலர்ச்சியோடு இருக்கும் கலை....
ரொம்ப நல்ல வரிகள்... :-)) ரசித்து படித்தேன்..!!

காதல் கவிதை தமிழ் said...

காலத்தின் சுழற்சியில்
கட்டுக்கள் கழன்றிட
சுதந்திர வானில்
சிறகசைப்பேன் வான்தொட்டு.....

wowwwwwwwwwwwwww.............
ஒவ்வொருவரும் உள்மனதில் வைக்க வேண்டிய வாசகம் இது..!

நன்றி தோழி சக்தி!
தங்களின் ஒவ்வொரு கவிதையும்
படிக்க படிக்க அர்ப்புதமாய் உள்ளது
அனைத்தும் அனுபவக்கவிதை தான்
என்று என்னை உணரவைக்கிறது.

போளூர் தயாநிதி said...

எமை நொறுங்கச் செய்து
நெஞ்சில் நெறி கட்டி
கொண்டவை எவரிடத்தும்
பகிரப்படாது என்னுள்
புதையுண்டிருக்கும்.....
nalla aakkam
parattugal
polurdhayanithi

சிவகுமாரன் said...

"என் மீள்வருகைக்காய்
நீங்கள் தவமிருக்கும் நாட்களை"
---- தன்னம்பிக்கை வரிகள்.
வாழ்த்துக்கள்.

சிந்தையின் சிதறல்கள் said...

அருமையான வார்ப்பு

sakthi said...

கலாநேசன் said...

மெல்லுணர்வின் வெளிப்பாடு.....அருமை

நன்றி கலா நேசன்

sakthi said...

பிரஷா said...

மிக அருமை தோழி..

நன்றி பிரஷா

sakthi said...

logu.. said...

\\என் மீள்வருகைக்காய்
நீங்கள் தவமிருக்கும் நாட்களை
மனத்திரையில் கண்டு களித்திட்டு.....\\

Silar kanavugal ipdithan kalam ulla kalam varai manathiraiyodu mattume

ஆமா லோகு நன்றி உன் வருகைக்கு

sakthi said...

சத்ரியன் said...

சக்தி,

கூண்டை உடைக்கனும் போல இருக்கே

அதை உடைச்சா நிறைய பேர் மனசு உடைஞ்சிடும் அதான் இன்னும் உடைக்க மனசு வரலை

sakthi said...

Balaji saravana said...

நல்லா இருக்கு சக்தி

நன்றி பாலாஜி

sakthi said...

ஆ.ஞானசேகரன் said...

//என் மீள்வருகைக்காய்
நீங்கள் தவமிருக்கும் நாட்களை
மனத்திரையில் கண்டு களித்திட்டு.....//


நல்லாயிருக்கு

நன்றி சேகரன்

sakthi said...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

கவசம் அருமை சக்தி..

நன்றி தேனம்மா

sakthi said...

ஹேமா said...

சக்தி...கவசம் நல்லதொரு வார்த்தை.எதையும் மூடி மறைச்சிடலாம்

ஆமா ஹேமா அது நிஜம் தான் நன்றி மா தங்கள் வருகைக்கு

sakthi said...

THOPPITHOPPI said...

எமை நொறுங்கச் செய்து
நெஞ்சில் !நெறி கட்டி !

புதுமையான் வரிகள்

நன்றி தொப்பி

sakthi said...

இசக்கிமுத்து said...

கவசங்களால் கவலை வேண்டாம்,வெளியே வாருங்கள்!!

முயற்சிக்கிறேன் முடியவில்லை இசக்கி

sakthi said...

nanthavanam said...

அழகிய கவிதை... வாழ்த்துக்கள்

நன்றி நந்தவனம்

sakthi said...

அன்புடன் மலிக்கா said...

அருமையாக இருக்கு தோழி

நன்றி மல்லிகா

sakthi said...

shammi's blog said...

unmaiyil ellarum kavasam poondu than prianthu irukkirom , sila samayam kavasam atru irukkavum byapadugirom

நன்றி ஷம்மி முதல் வருகைக்கு

sakthi said...

Ananthi said...

///உளைகிற மனம்
உள்ளே அழுதாலும்
வெளியே முகம் மலர்த்தும்
கலையை உங்களுக்காய் வளர்த்திருக்கிறேன்//

உள்ளே எவ்ளோ சோகம் இருப்பினும், முக மலர்ச்சியோடு இருக்கும் கலை....
ரொம்ப நல்ல வரிகள்... :-)) ரசித்து படித்தேன்..!!

நன்றி ஆனந்தி

sakthi said...

B.Saffar said...

காலத்தின் சுழற்சியில்
கட்டுக்கள் கழன்றிட
சுதந்திர வானில்
சிறகசைப்பேன் வான்தொட்டு.....

wowwwwwwwwwwwwww.............
ஒவ்வொருவரும் உள்மனதில் வைக்க வேண்டிய வாசகம் இது..!

நன்றி தோழி சக்தி!
தங்களின் ஒவ்வொரு கவிதையும்
படிக்க படிக்க அர்ப்புதமாய் உள்ளது
அனைத்தும் அனுபவக்கவிதை தான்
என்று என்னை உணரவைக்கிறது.

ஆமா ஷப்பார் நன்றி முதல் வருகைக்கு

sakthi said...

polurdhayanithi said...

எமை நொறுங்கச் செய்து
நெஞ்சில் நெறி கட்டி
கொண்டவை எவரிடத்தும்
பகிரப்படாது என்னுள்
புதையுண்டிருக்கும்.....
nalla aakkam
parattugal
polurdhayanit

நன்றி தயானிதி

sakthi said...

சிவகுமாரன் said...

"என் மீள்வருகைக்காய்
நீங்கள் தவமிருக்கும் நாட்களை"
---- தன்னம்பிக்கை வரிகள்.
வாழ்த்துக்கள்

நன்றி சிவகுமாரன்

sakthi said...

நேசமுடன் ஹாசிம் said...

அருமையான வார்ப்பு

நன்றி ஹாசிம்