Thursday, November 11, 2010

கலியுகபுருஷனும் பிரம்மராட்சதனும்.....


காதல் கொண்டு
கரம் பிடிப்பான்
கருத்தொருமிக்கவில்லையெனில்
கழட்டிவிட்டுச் செல்லும்
கலியுகபுருஷனும்....

தன் தேவை முடிந்ததும்
பெண் (பிள்ளை) தேவையில்லை என
கருவறையை
கல்லறையாக்குபவனும்....

பத்து வயது குட்டி பெண்ணோ
பருவத்து சுட்டி பெண்ணோ
பத்தினியோ
பரத்தையோ
கொன்றழித்து தின்றொழி
காமப்பசிக்கு
குற்றமொன்றுமில்லை எனும்
நவீன சாத்தான்களும்....

பெண்ணின் பிணத்தை கூட
புணரும் பேராண்மை
படைத்த
பிரம்மராட்சதர்களும்
உலவும் பூமியில்....
பெண்ணாய் பிறப்பெடுத்தற்கே
பெரும்பாவம் செய்திருத்தல் வேண்டும்.....

24 comments:

ரோகிணிசிவா said...

வார்த்தைகள் அழகு
ஆனால் அர்த்தமோ வலி

THOPPITHOPPI said...

கவிதை கவிதை

எல் கே said...

வலி மிகுந்த வார்த்தைகள் சக்தி

Anonymous said...

இந்த மனித மிருகங்கள் என்று அடியோடு ஒழியுமோ?

கவி அழகன் said...

நெஞ்சை தொட்ட கவிதை

ஹேமா said...

அருமை சக்தி.பெண் என்கிறபடியால் உணர்வு தூக்கலாய் இருக்கிறது.

பெண்ணைத் துவேசம் செய்வார்கள்.
ஒரு நொடி ஏதோ ஒரு ஒரு உறவாய் பெண்ணின் துணை கண்டிப்பாய் தேவை அவர்களுக்கு.பெண் துணையில்லா ஆண்கள் ஒற்றைக் கையில்லாதவர்கள் போல.

Ahamed irshad said...

Touching Poetry..

Anonymous said...

//கொன்றழித்து தின்றொழி
காமப்பசிக்கு
குற்றமொன்றுமில்லை எனும்
நவீன சாத்தான்களும்....//

கிழித்துச் செல்லும் விசை வரிகள்..
அருமை சக்தி..

ஆ.ஞானசேகரன் said...

//தன் தேவை முடிந்ததும்
பெண் (பிள்ளை) தேவையில்லை என
கருவறையை
கல்லறையாக்குபவனும்..//

அழுத்தமான அதிலும் வலியுடன்

sathishsangkavi.blogspot.com said...

//பெண்ணின் பிணத்தை கூட
புணரும் பேராண்மை
படைத்த
பிரம்மராட்சதர்களும்//

உங்கள் வரிகளில் வலி தெரிகிறது...

logu.. said...

Varigalil vali therigirathu..

But ithellam konjam kooda nallalle..

Elloruma apdi irukanga?

விக்னேஷ்வரி said...

சக்தியிடமிருந்து சக்தி மிகு வார்த்தைகள். வார்த்தைகள் நல்லாருக்கு. ஆனா வலிக்குது.

ஆர்வா said...

அந்த பேய்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சி உங்க வார்த்தைகள்

Paul said...

வலியை உணர்த்துகின்றன உங்களது வரிகள்.. சில செய்திகளை படித்ததிலிருந்து பல இரவுகள் தூக்கமின்றி தவிக்கிறேன்.. உண்மையிலேயே பயமாய் இருக்கிறது பெண் பிள்ளைகளை வீட்டை விட்டனுப்ப :( :(

ப்ரியமுடன் வசந்த் said...

ம் நவீன சாத்தான்களை சாட்டையால் அடித்திருக்கிறீர்கள்

அருமை !

sakthi said...

ரோகிணிசிவா said...
வார்த்தைகள் அழகு
ஆனால் அர்த்தமோ வலி

நன்றி ரோகிணி

sakthi said...

நன்றி தொப்பி
நன்றி எல் கே
நன்றி தமிழ்
நன்றி யாதவன்
நன்றி ஹேமா
நன்றி அஹமது
நன்றி பாலாஜி
நன்றி சேகரன்

sakthi said...

நன்றி சங்கவி தங்களின் முதல் வருகைக்கு

நன்றி கவிதைக்காதலன் தங்களின் முதல் வருகைக்கு

நன்றி பால்

நன்றி விக்கி

நன்றி வசந்த்

sakthi said...

நன்றி சங்கவி தங்களின் முதல் வருகைக்கு

நன்றி கவிதைக்காதலன் தங்களின் முதல் வருகைக்கு

நன்றி பால்

நன்றி விக்கி

நன்றி வசந்த்

Unknown said...

உணர்ச்சிமிகு கவிதை.

kavitha said...

அருமை அக்கா

Thenammai Lakshmanan said...

நல்ல சாட்டையடி சக்தி..

Devendhirapoopathi said...

very regular poetry,but your words are giving hope.good

ரேவா said...

பெண்ணின் பிணத்தை கூட
புணரும் பேராண்மை
படைத்த
பிரம்மராட்சதர்களும்
உலவும் பூமியில்....
பெண்ணாய் பிறப்பெடுத்தற்கே
பெரும்பாவம் செய்திருத்தல் வேண்டும்.....
அழகான வரிகள்