Saturday, May 30, 2009

உனக்கான என் கவிதை....


எனக்கான கவிதை
எங்கென
எனைக்கேட்கும்
என்னவனே...

உனக்கான கவிதை
கற்பனையில் உதித்து
காகிதத்திலா எழுதப்படும்??

என் மருளும் கண்களுக்குள்
உருளும் கண்மணிகள் சொல்லும்
உனக்கான என் கவிதையை....

உனை தொட்டும் தொடாமலும்
பட்டும் படாமலும் வருடிச் செல்லும்
என் வெப்பமூச்சுக்காற்று சொல்லிடும்
உனக்கான என் கவிதையை....

நிலா கள் ஊற்றும்
நள்ளிரவில்
காற்றில் அலைந்து திரியும்
என் கைகளுனை காணாது
கண்ணீர் விடும்....

மனம் லட்ச லட்சமான
சிக்கலில் பின்னிக்கொள்ளும்
உணர்வுகளின் இயக்கம் அறுந்து போகும்
எனை மெளனத்திற்குள்
புதைத்து கொள்ளத் தோன்றும்
உன் நினைவுகளில்
பல மின்னல் மனதிற்குள் மின்ன...

காதலெனும் கனமழைக்குள் சிக்கி
கரைந்து கரைந்து
காணாமல் போகின்றேனே இது கூட
காதல் கவிதை தானே....

என் இன்னுயிரே
உனை கண்டதும்
வெடித்த கொடிப்பூவாய்
உன்னில் படர்ந்து
விக்கித்து விதிர்த்து
வியர்த்து போகின்றேனே
விளங்கிடவில்லையா
இந்த நொடி
காதலாய் கவிதையாய் உனக்கு....

இதற்கு மேல்
இதை விளக்கிட
இனி வார்த்தையொன்றுமில்லை எனக்கு...

125 comments:

நட்புடன் ஜமால் said...

அட

தலைப்பே எல்லாத்தையும்

சொல்லிடிச்சி

(மாம்ஸ்)

நட்புடன் ஜமால் said...

என் மருளும் கண்களுக்குள்
உருளும் கண்மணிகள் சொல்லும்
உனக்கான என் கவிதையை....\\



அருமை தங்கச்சி

மயாதி said...

உணர்வுகள் வித்தியாசம்...

S.A. நவாஸுதீன் said...

எனக்கான கவிதை
எங்கென
எனக்கேட்கும்
என்னவனே...

அழகாய், அருமையாய் ஒரு இலவச இணைப்போ!!
(மாம்ஸ்)

S.A. நவாஸுதீன் said...

என் மருளும் கண்களுக்குள்
உருளும் கண்மணிகள் சொல்லும்
உனக்கான என் கவிதையை....

வாவ்! அருமை சக்தி

தமிழ் said...

/எனக்கான கவிதை
எங்கென
எனக்கேட்கும்
என்னவனே...

உனக்கான கவிதை
கற்பனையில் உதித்து
காகிதத்திலா எழுதப்படும்??

என் மருளும் கண்களுக்குள்
உருளும் கண்மணிகள் சொல்லும்
உனக்கான என் கவிதையை....

உனை தொட்டும் தொடாமலும்
பட்டும் படாமலும் வருடிச் செல்லும்
என் வெப்பமூச்சுக்காற்று சொல்லிடும்
உனக்கான என் கவிதையை..../

அருமை

S.A. நவாஸுதீன் said...

நிலா கள் ஊற்றும்
நள்ளிரவில்
காற்றில் அலைந்து திரியும்
என் கைகளுனை காணாது
கண்ணீர் விடும்

கைகள் விடும் கண்ணீர். புதிய கோணம். நீ கலக்குமா சக்தி

S.A. நவாஸுதீன் said...

என் இன்னுயிரே
உனை கண்டதும்
வெடித்த கொடிப்பூவாய்
உன்னில் படர்ந்து
விக்கித்து விதிர்த்து
வியர்த்து போகின்றேனே
விளங்கிடவில்லையா
இந்த நொடி
காதலாய் கவிதையாய் உனக்கு....

சூப்பர்

கலையரசன் said...

பகுதி பகுதியாக பிரிக்கமுடியவில்லை உன் கவிதையை!
முழுதாய் என்னுள் அமிழ்ந்து போய்விட்டது உணர்வைபோல!!

வேத்தியன் said...

என் மருளும் கண்களுக்குள்
உருளும் கண்மணிகள் சொல்லும்
உனக்கான என் கவிதையை....//

மிகவும் ரசித்தேன்...

(ரைமிங்னா இதானோ???)
:-)

வேத்தியன் said...

காதலெனும் கனமழைக்குள் சிக்கி
கரைந்து கரைந்து
காணாமல் போகின்றேனே இது கூட
காதல் கவிதை தானே....
//

கற்பனை சூப்பர்ங்க...

அப்துல்மாலிக் said...

இங்கும் ஒரு கவிதை தேடல்

எல்லோரும் சொல்லிவெச்சி களத்துலே இறக்கிவிடுவீங்களோ

அப்துல்மாலிக் said...

வித்தியாசமான வரிகளில் எழுத்தப்பட்ட கவிதை

உனக்கான ஒரு கவிதை

அப்துல்மாலிக் said...

//என் இன்னுயிரே
உனை கண்டதும்
வெடித்த கொடிப்பூவாய்
உன்னில் படர்ந்து
விக்கித்து விதிர்த்து
வியர்த்து போகின்றேனே
//

வார்த்தைகள் கொடிபோல் படர்ந்திருக்கு

அப்துல்மாலிக் said...

//காதலெனும் கனமழைக்குள் சிக்கி
கரைந்து கரைந்து
காணாமல் போகின்றேனே இது கூட
காதல் கவிதை தானே....
///

ஆமா ஆமா ஆமா இல்லைனு யார் சொன்னது.....

ஆதவா said...

சக்தி மேடம்.. என்ன சொல்வது... ரொம்ப நேரமா உங்க தளத்தில் இருக்கேன். கவிதை கொஞ்சம் நீளம்தான் என்றாலும் சில வரிகள் ரொம்பவும் பிடித்திருக்கிறது.


மூச்சுக்காற்று சொல்லும் கவிதை
கல் ஊறும் நள்ளிரவு
உணர்வியக்கம் தொலைந்து மெளனத்தில் புதையும்
காதல்மழையில் கரைந்து போவது



இறுதியாக முடிவும்!!!!

S.A. நவாஸுதீன் said...

உன் நினைவுகளில்
பல மின்னல் மனதிற்குள் மின்ன
காதலெனும் கனமழைக்குள் சிக்கி
கரைந்து கரைந்து
காணாமல் போகின்றேனே இது கூட
காதல் கவிதை தானே....

நல்ல கற்பனை. மொத்தத்தில் நல்ல கவிதை சக்தி

வினோத் கெளதம் said...

திருப்பி திருப்பி நல்லா இருக்குன்னு சொல்லி சொல்லி போர் அடிக்குது..
சக்தி இதே பீல்ல ஏன் சிறுகதை முயற்சி பண்ண மாட்டுரிங்க கவிதையே இவ்வளவு சுலபமா வரப்ப அது இன்னும் ரொம்ப சிம்பிள்..முயற்சி செயுங்கள்...

நட்புடன் ஜமால் said...

\\காதலெனும் கனமழைக்குள் சிக்கி
கரைந்து கரைந்து
காணாமல் போகின்றேனே இது கூட
காதல் கவிதை தானே...\\



ஆமாம் ஆமாம் அதேதான்

வியா (Viyaa) said...

உனக்கான கவிதை
கற்பனையில் உதித்து
காகிதத்திலா எழுதப்படும்??///

alagana varigal..

sarathy said...

// என் மருளும் கண்களுக்குள்
உருளும் கண்மணிகள் சொல்லும்
உனக்கான என் கவிதையை.... //

சக்தி நிறைந்த வரிகள்..

sarathy said...

யாராவது வைரமுத்து குரலில் வாசிச்சு
ஆடியோ போடுங்கப்பா இந்த கவிதையை...

ஆளவந்தான் said...

ஹய்யா.. மாதுரி :)

ஆளவந்தான் said...

//
விக்கித்து விதிர்த்து
வியர்த்து போகின்றேனே
//

தமிழ் விளையாடுது :)

Anonymous said...

அருமை

கவிக்கிழவன் said...

இலங்கையில் இருந்து யாதவன்

உங்கள் படைப்பு நன்றாக உள்ளது
அருமையான வரிகள்

sakthi said...

நட்புடன் ஜமால் said...

அட

தலைப்பே எல்லாத்தையும்

சொல்லிடிச்சி

(மாம்ஸ்)

நன்றி ஜமால் அண்ணா

sakthi said...

நட்புடன் ஜமால் said...

என் மருளும் கண்களுக்குள்
உருளும் கண்மணிகள் சொல்லும்
உனக்கான என் கவிதையை....\\



அருமை தங்கச்சி

ரசித்தமைக்கு நன்றி ஜமால் அண்ணா

sakthi said...

மயாதி said...

உணர்வுகள் வித்தியாசம்..

நன்றி மயாதி

தங்களின் முதல் வரவுக்கு

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

எனக்கான கவிதை
எங்கென
எனக்கேட்கும்
என்னவனே...

அழகாய், அருமையாய் ஒரு இலவச இணைப்போ!!
(மாம்ஸ்)

வாங்க நவாஸ் அண்ணா

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

என் மருளும் கண்களுக்குள்
உருளும் கண்மணிகள் சொல்லும்
உனக்கான என் கவிதையை....

வாவ்! அருமை சக்தி

நன்றி நவாஸ் அண்ணா

sakthi said...

திகழ்மிளிர் said...

/எனக்கான கவிதை
எங்கென
எனக்கேட்கும்
என்னவனே...

உனக்கான கவிதை
கற்பனையில் உதித்து
காகிதத்திலா எழுதப்படும்??

என் மருளும் கண்களுக்குள்
உருளும் கண்மணிகள் சொல்லும்
உனக்கான என் கவிதையை....

உனை தொட்டும் தொடாமலும்
பட்டும் படாமலும் வருடிச் செல்லும்
என் வெப்பமூச்சுக்காற்று சொல்லிடும்
உனக்கான என் கவிதையை..../

அருமை

நன்றி திகழ்மிளிர்

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

நிலா கள் ஊற்றும்
நள்ளிரவில்
காற்றில் அலைந்து திரியும்
என் கைகளுனை காணாது
கண்ணீர் விடும்

கைகள் விடும் கண்ணீர். புதிய கோணம். நீ கலக்குமா சக்தி

உங்கள் அனைவரின் ஆதரவோடு

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

என் இன்னுயிரே
உனை கண்டதும்
வெடித்த கொடிப்பூவாய்
உன்னில் படர்ந்து
விக்கித்து விதிர்த்து
வியர்த்து போகின்றேனே
விளங்கிடவில்லையா
இந்த நொடி
காதலாய் கவிதையாய் உனக்கு....

சூப்பர்

நன்றி அண்ணா

sakthi said...

கலையரசன் said...

பகுதி பகுதியாக பிரிக்கமுடியவில்லை உன் கவிதையை!
முழுதாய் என்னுள் அமிழ்ந்து போய்விட்டது உணர்வைபோல!!

நன்றி கலையரசன்

sakthi said...

வேத்தியன் said...

என் மருளும் கண்களுக்குள்
உருளும் கண்மணிகள் சொல்லும்
உனக்கான என் கவிதையை....//

மிகவும் ரசித்தேன்...

(ரைமிங்னா இதானோ???)

ஆமாம் வேத்தியன்

வருகைக்கு நன்றி

sakthi said...

வேத்தியன் said...

காதலெனும் கனமழைக்குள் சிக்கி
கரைந்து கரைந்து
காணாமல் போகின்றேனே இது கூட
காதல் கவிதை தானே....
//

கற்பனை சூப்பர்ங்க...

நன்றி வேத்தியரே

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

இங்கும் ஒரு கவிதை தேடல்

எல்லோரும் சொல்லிவெச்சி களத்துலே இறக்கிவிடுவீங்களோ

ஆமா அபு அண்ணா

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

வித்தியாசமான வரிகளில் எழுத்தப்பட்ட கவிதை

உனக்கான ஒரு கவிதை

நன்றி அபு அண்ணா

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

//என் இன்னுயிரே
உனை கண்டதும்
வெடித்த கொடிப்பூவாய்
உன்னில் படர்ந்து
விக்கித்து விதிர்த்து
வியர்த்து போகின்றேனே
//

வார்த்தைகள் கொடிபோல் படர்ந்திருக்கு

ரசித்த்மைக்கு நன்றி

அ.மு.செய்யது said...

நாந்தான் லேட்டா....தாமத வருகைக்கு மன்னிகவும்.


//என் மருளும் கண்களுக்குள்
உருளும் கண்மணிகள் சொல்லும்
உனக்கான என் கவிதையை..//

பயங்கர ரொமான்டிக் வரிகள் சக்தி...

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

//காதலெனும் கனமழைக்குள் சிக்கி
கரைந்து கரைந்து
காணாமல் போகின்றேனே இது கூட
காதல் கவிதை தானே....
///

ஆமா ஆமா ஆமா இல்லைனு யார் சொன்னது.....

ஆமா

நன்றி அபு அண்ணா

sakthi said...

அ.மு.செய்யது said...

நாந்தான் லேட்டா....தாமத வருகைக்கு மன்னிகவும்.


//என் மருளும் கண்களுக்குள்
உருளும் கண்மணிகள் சொல்லும்
உனக்கான என் கவிதையை..//

பயங்கர ரொமான்டிக் வரிகள் சக்தி.

நன்றி செய்யது தம்பி

sakthi said...

ஆதவா said...

சக்தி மேடம்.. என்ன சொல்வது... ரொம்ப நேரமா உங்க தளத்தில் இருக்கேன். கவிதை கொஞ்சம் நீளம்தான் என்றாலும் சில வரிகள் ரொம்பவும் பிடித்திருக்கிறது.


மூச்சுக்காற்று சொல்லும் கவிதை
கல் ஊறும் நள்ளிரவு
உணர்வியக்கம் தொலைந்து மெளனத்தில் புதையும்
காதல்மழையில் கரைந்து போவது



இறுதியாக முடிவும்!!!!

நன்றி ஆதவா தங்களின் அழகிய பின்னூட்டத்திற்க்கு

sakthi said...

S.A. நவாஸுதீன் said...

உன் நினைவுகளில்
பல மின்னல் மனதிற்குள் மின்ன
காதலெனும் கனமழைக்குள் சிக்கி
கரைந்து கரைந்து
காணாமல் போகின்றேனே இது கூட
காதல் கவிதை தானே....

நல்ல கற்பனை. மொத்தத்தில் நல்ல கவிதை சக்தி

மிக மிக நன்றி நவாஸ் அண்ணா

அ.மு.செய்யது said...

//சிக்கலில் பின்னிக்கொள்ளும்
உணர்வுகளின் இயக்கம் அறுந்து போகும்
எனை மெளனத்திற்குள்
புதைத்து கொள்ளத் தோன்றும்//

வார்த்தைகளின் கோர்வை அழகாக வந்திருக்கிறது.

sakthi said...

vinoth gowtham said...

திருப்பி திருப்பி நல்லா இருக்குன்னு சொல்லி சொல்லி போர் அடிக்குது..
சக்தி இதே பீல்ல ஏன் சிறுகதை முயற்சி பண்ண மாட்டுரிங்க கவிதையே இவ்வளவு சுலபமா வரப்ப அது இன்னும் ரொம்ப சிம்பிள்..முயற்சி செயுங்கள்...

கண்டிப்பாக வெகு விரைவில் முயற்சிக்கிறேன் வினோத்

sakthi said...

அ.மு.செய்யது said...

//சிக்கலில் பின்னிக்கொள்ளும்
உணர்வுகளின் இயக்கம் அறுந்து போகும்
எனை மெளனத்திற்குள்
புதைத்து கொள்ளத் தோன்றும்//

வார்த்தைகளின் கோர்வை அழகாக வந்திருக்கிறது.

ரசித்தமைக்கு நன்றிப்பா

அ.மு.செய்யது said...

உங்கள் கவிதைக்கு ஒரு எதிர்கவிதை போட மனம் துடிக்கிறது.

ஆனா வார்த்தை முட்டுது...அக்கா கவிதைக்கு நோ எதிர் கவுஜ.

sakthi said...

நட்புடன் ஜமால் said...

\\காதலெனும் கனமழைக்குள் சிக்கி
கரைந்து கரைந்து
காணாமல் போகின்றேனே இது கூட
காதல் கவிதை தானே...\\



ஆமாம் ஆமாம் அதேதான்

ஆமா ஆமா அதே தான் அண்ணா

அ.மு.செய்யது said...

me the 50......???

sakthi said...

அ.மு.செய்யது said...

உங்கள் கவிதைக்கு ஒரு எதிர்கவிதை போட மனம் துடிக்கிறது.

ஆனா வார்த்தை முட்டுது...அக்கா கவிதைக்கு நோ எதிர் கவுஜ.

அது வரை சந்தோசம் பா

sakthi said...

அ.மு.செய்யது said...

me the 50......???

en blog la nane 50 potta nalla erukathu

sakthi said...

வியா (Viyaa) said...

உனக்கான கவிதை
கற்பனையில் உதித்து
காகிதத்திலா எழுதப்படும்??///

alagana varigal..

நன்றி வியா

sakthi said...

sarathy said...

// என் மருளும் கண்களுக்குள்
உருளும் கண்மணிகள் சொல்லும்
உனக்கான என் கவிதையை.... //

சக்தி நிறைந்த வரிகள்..

நன்றி சாரதி

sakthi said...

sarathy said...

யாராவது வைரமுத்து குரலில் வாசிச்சு
ஆடியோ போடுங்கப்பா இந்த கவிதையை...

சீக்கிரம் நடக்கட்டும் சாரதி

sakthi said...

ஆளவந்தான் said...

//
விக்கித்து விதிர்த்து
வியர்த்து போகின்றேனே
//

தமிழ் விளையாடுது :)

ஆம் ஆளவந்தார்

நன்றி ஆளவந்தாரே தங்கள் வருகைக்கு

sakthi said...

கடையம் ஆனந்த் said...

அருமை

நன்றி கடையம் ஆனந்த்

தங்கள் முதல் வருகைக்கு

sakthi said...

கவிக்கிழவன் said...

இலங்கையில் இருந்து யாதவன்

உங்கள் படைப்பு நன்றாக உள்ளது
அருமையான வரிகள்

நன்றி கவிக்கிழவன்

வா(வ)ரம் said...

யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.

யாருடைய பின்னூடமும் தேவையில்லை.

படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்

“வாரம்” இணைய இதழ்(லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)

வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!

ப்ரியமுடன் வசந்த் said...

என்னாது இது தமிழும் நீங்களும்

ஒரே அலைவரிசையா.......

பின்றீங்க.....

sakthi said...

பிரியமுடன்.........வசந்த் said...

என்னாது இது தமிழும் நீங்களும்

ஒரே அலைவரிசையா.......

பின்றீங்க.....

ஆமாங்க

*இயற்கை ராஜி* said...

அருமை

shakthikumar said...

puratchi kavi puthu konathukku maaritteenga super akkaa
ithuthaan sakthiyin maru pakkamaa?
romba nallaa irukku akkaa

sakthi said...

இய‌ற்கை said...

அருமை

நன்றி இயற்கை

sakthi said...

shakthi kumar said...

puratchi kavi puthu konathukku maaritteenga super akkaa
ithuthaan sakthiyin maru pakkamaa?
romba nallaa irukku akkaa

நன்றி சக்திகுமார்

புதியவன் said...

//என் மருளும் கண்களுக்குள்
உருளும் கண்மணிகள் சொல்லும்
உனக்கான என் கவிதையை....//

மருளும் உருளும் ரைமிங் நல்லா இருக்கு...

புதியவன் said...

//நிலா கள் ஊற்றும்
நள்ளிரவில்
காற்றில் அலைந்து திரியும்
என் கைகளுனை காணாது
கண்ணீர் விடும்....//

அழகான வரிகள்...

புதியவன் said...

//காதலெனும் கனமழைக்குள் சிக்கி
கரைந்து கரைந்து
காணாமல் போகின்றேனே இது கூட
காதல் கவிதை தானே....//

சந்தேகமில்லாமல் இது ஒரு அழகான
காதல் கவிதை தான் சக்தி...

பாலா said...

என் இன்னுயிரே
உனை கண்டதும்
வெடித்த கொடிப்பூவாய்
உன்னில் படர்ந்து
விக்கித்து விதிர்த்து
வியர்த்து போகின்றேனே
விளங்கிடவில்லையா
இந்த நொடி
காதலாய் கவிதையாய் உனக்கு

mmmmmmmmmm
mhum
mhuhuhm

பாலா said...

மனம் லட்ச லட்சமான
சிக்கலில் பின்னிக்கொள்ளும்
உணர்வுகளின் இயக்கம் அறுந்து போகும்
எனை மெளனத்திற்குள்
புதைத்து கொள்ளத் தோன்றும்
உன் நினைவுகளில்
பல மின்னல் மனதிற்குள் மின்ன...

nalla irukku

ithe thaan
ithuthaan

பாலா said...

நிலா கள் ஊற்றும்
நள்ளிரவில்
காற்றில் அலைந்து திரியும்
என் கைகளுனை காணாது
கண்ணீர் விடும்....


kaathal uruki ozhukuthu pola

super ka

Admin said...

உங்கள் பதிவுகள் அருமை தொடருங்கள்...

வாழ்த்துக்கள்....

sakthi said...

புதியவன் said...

//என் மருளும் கண்களுக்குள்
உருளும் கண்மணிகள் சொல்லும்
உனக்கான என் கவிதையை....//

மருளும் உருளும் ரைமிங் நல்லா இருக்கு...

நன்றி புதியவன் அண்ணா

sakthi said...

புதியவன் said...

//நிலா கள் ஊற்றும்
நள்ளிரவில்
காற்றில் அலைந்து திரியும்
என் கைகளுனை காணாது
கண்ணீர் விடும்....//

அழகான வரிகள்...

ரசித்தமைக்கு நன்றி புதியவன் அண்ணா

sakthi said...

புதியவன் said...

//காதலெனும் கனமழைக்குள் சிக்கி
கரைந்து கரைந்து
காணாமல் போகின்றேனே இது கூட
காதல் கவிதை தானே....//

சந்தேகமில்லாமல் இது ஒரு அழகான
காதல் கவிதை தான் சக்தி...

உங்களை விட காதல் கவிதை யார்

அழகாய் எழுதப்போகின்றார்கள்

என்னால் முடிந்த சிறு முயற்சி அவ்வளவே

sakthi said...

பாலா said...

என் இன்னுயிரே
உனை கண்டதும்
வெடித்த கொடிப்பூவாய்
உன்னில் படர்ந்து
விக்கித்து விதிர்த்து
வியர்த்து போகின்றேனே
விளங்கிடவில்லையா
இந்த நொடி
காதலாய் கவிதையாய் உனக்கு

mmmmmmmmmm
mhum
mhuhuhm

என்ன ம்ம்ம்

sakthi said...

பாலா said...

மனம் லட்ச லட்சமான
சிக்கலில் பின்னிக்கொள்ளும்
உணர்வுகளின் இயக்கம் அறுந்து போகும்
எனை மெளனத்திற்குள்
புதைத்து கொள்ளத் தோன்றும்
உன் நினைவுகளில்
பல மின்னல் மனதிற்குள் மின்ன...

nalla irukku

ithe thaan
ithuthaan

நன்றி பாலா

sakthi said...

பாலா said...

நிலா கள் ஊற்றும்
நள்ளிரவில்
காற்றில் அலைந்து திரியும்
என் கைகளுனை காணாது
கண்ணீர் விடும்....


kaathal uruki ozhukuthu pola

super ka

யப்பா அவார்டு கிடைச்சிடுச்சி

நீ சூப்பர்ன்னு சொன்னா அவார்டு மாதிரி பாலா

gayathri said...

உனை தொட்டும் தொடாமலும்
பட்டும் படாமலும் வருடிச் செல்லும்
என் வெப்பமூச்சுக்காற்று சொல்லிடும்
உனக்கான என் கவிதையை....


enaku rompa pudicha varikal da

sakthi said...

சந்ரு said...

உங்கள் பதிவுகள் அருமை தொடருங்கள்...

வாழ்த்துக்கள்....

நன்றி சந்ரு

sakthi said...

gayathri said...

உனை தொட்டும் தொடாமலும்
பட்டும் படாமலும் வருடிச் செல்லும்
என் வெப்பமூச்சுக்காற்று சொல்லிடும்
உனக்கான என் கவிதையை....


enaku rompa pudicha varikal da

நன்றி காயா

gayathri said...

hey chellam eaal super da

sakthi said...

gayathri said...

hey chellam eaal super da

நன்றி காயத்ரி

uma said...

neenga eluthinathuleye ithu than periya kavithai sakthi

uma said...

உனக்கான கவிதை
கற்பனையில் உதித்து
காகிதத்திலா எழுதப்படும்??

என் மருளும் கண்களுக்குள்
உருளும் கண்மணிகள் சொல்லும்
உனக்கான என் கவிதையை....

உனை தொட்டும் தொடாமலும்
பட்டும் படாமலும் வருடிச் செல்லும்
என் வெப்பமூச்சுக்காற்று சொல்லிடும்
உனக்கான என் கவிதையை....


super sakthi

uma said...

நிலா கள் ஊற்றும்
நள்ளிரவில்
காற்றில் அலைந்து திரியும்
என் கைகளுனை காணாது
கண்ணீர் விடும்....

kathalai nalla solli erukenga sakthi

uma said...

காதலெனும் கனமழைக்குள் சிக்கி
கரைந்து கரைந்து
காணாமல் போகின்றேனே இது கூட
காதல் கவிதை தானே....


வாவ்! அருமை சக்தி!!!!!!!!!!!

uma said...

என் இன்னுயிரே
உனை கண்டதும்
வெடித்த கொடிப்பூவாய்
உன்னில் படர்ந்து
விக்கித்து விதிர்த்து
வியர்த்து போகின்றேனே
விளங்கிடவில்லையா
இந்த நொடி
காதலாய் கவிதையாய் உனக்கு....

இதற்கு மேல்
இதை விளக்கிட
இனி வார்த்தையொன்றுமில்லை எனக்கு...

நல்ல கவிதை சக்தி

uma said...

படம் சொல்லுது உங்க கவிதையை

அழகு சக்தி

Anonymous said...

அருமை

கபிலன் said...

"உனை தொட்டும் தொடாமலும்
பட்டும் படாமலும் வருடிச் செல்லும்
என் வெப்பமூச்சுக்காற்று சொல்லிடும்
உனக்கான என் கவிதையை...."
அருமையா இருக்குங்க!

Anonymous said...

இந்த காதல் கவிதையைத் தான் எனக்காக விட்டு வைத்திருந்தாய் இதிலுமா?
...இனி எனக்கிங்கிங்கு வேலையில்லை.....

இத்தனை ஆழமான காதலா? நிலாவுக்கே கள்லா?

இதை உடனடியாக பரிசீலிக்க அரசிடம் முறையிடுகிறேன்....

முச்சுக் காற்றும் கவிதை சொல்லும் விந்தை....ஆஹா சுவை...

சக்தி உன்னை இப்படி எழுத தூண்டிய சக்திக்கு எத்தனை சக்தி...கல்லுக்குள் ஈரம் போல் சக்திக்குள் காதல்

அதிசயம் ஆனால் உண்மை....

வாழ்த்துக்கள் வலைச்சர ஆசிரியரே.....

மேவி... said...

"உனக்கான கவிதை
கற்பனையில் உதித்து
காகிதத்திலா எழுதப்படும்??"

கற்பனை சிறகுகள் இருந்தாலும் காற்றில் தான் பறக்க வேண்டும்...


"உனை தொட்டும் தொடாமலும்
பட்டும் படாமலும் வருடிச் செல்லும்
என் வெப்பமூச்சுக்காற்று சொல்லிடும்
உனக்கான என் கவிதையை...."

அப்பொழுதே கவிதை தான் படைத்தது கொண்டுருப்பிர்...

மேலும் கவிதை வெகு அருமை....

SUBBU said...

இனி வார்த்தையொன்றுமில்லை எனக்கும்...

SUBBU said...

97

SUBBU said...

99

SUBBU said...

100
:))))))))))))))))

vasu balaji said...

/உணர்வுகளின் இயக்கம் அறுந்து போகும்
எனை மெளனத்திற்குள்
புதைத்து கொள்ளத் தோன்றும்/

/விளங்கிடவில்லையா
இந்த நொடி
காதலாய் கவிதையாய் உனக்கு..../

ம்ம். அசத்தல்.

sakthi said...

uma said...

neenga eluthinathuleye ithu than periya kavithai sakthi


ஆம் உமா

கொஞ்சம் பெரிய கவிதை தான்

sakthi said...

uma said...

உனக்கான கவிதை
கற்பனையில் உதித்து
காகிதத்திலா எழுதப்படும்??

என் மருளும் கண்களுக்குள்
உருளும் கண்மணிகள் சொல்லும்
உனக்கான என் கவிதையை....

உனை தொட்டும் தொடாமலும்
பட்டும் படாமலும் வருடிச் செல்லும்
என் வெப்பமூச்சுக்காற்று சொல்லிடும்
உனக்கான என் கவிதையை....


super sakthi

நன்றி உமா

sakthi said...

uma said...

நிலா கள் ஊற்றும்
நள்ளிரவில்
காற்றில் அலைந்து திரியும்
என் கைகளுனை காணாது
கண்ணீர் விடும்....

kathalai nalla solli erukenga sakthi

ரசித்தமைக்கு நன்றிப்பா

sakthi said...

uma said...

காதலெனும் கனமழைக்குள் சிக்கி
கரைந்து கரைந்து
காணாமல் போகின்றேனே இது கூட
காதல் கவிதை தானே....


வாவ்! அருமை சக்தி!!!!!!!!!!!


தங்களின் பாராட்டுக்கு நன்றி மா

sakthi said...

uma said...

என் இன்னுயிரே
உனை கண்டதும்
வெடித்த கொடிப்பூவாய்
உன்னில் படர்ந்து
விக்கித்து விதிர்த்து
வியர்த்து போகின்றேனே
விளங்கிடவில்லையா
இந்த நொடி
காதலாய் கவிதையாய் உனக்கு....

இதற்கு மேல்
இதை விளக்கிட
இனி வார்த்தையொன்றுமில்லை எனக்கு...

நல்ல கவிதை சக்தி

தொடர்ந்து வாருங்கள் உமா

sakthi said...

கடையம் ஆனந்த் said...

அருமை

நன்றி கடையம் ஆனந்த்

sakthi said...

MayVee said...

"உனக்கான கவிதை
கற்பனையில் உதித்து
காகிதத்திலா எழுதப்படும்??"

கற்பனை சிறகுகள் இருந்தாலும் காற்றில் தான் பறக்க வேண்டும்...


"உனை தொட்டும் தொடாமலும்
பட்டும் படாமலும் வருடிச் செல்லும்
என் வெப்பமூச்சுக்காற்று சொல்லிடும்
உனக்கான என் கவிதையை...."

அப்பொழுதே கவிதை தான் படைத்தது கொண்டுருப்பிர்...

மேலும் கவிதை வெகு அருமை....

நன்றி மேவீ

sakthi said...

SUBBU said...

இனி வார்த்தையொன்றுமில்லை எனக்கும்...

நன்றி சுப்பு

sakthi said...

பாலா... said...

/உணர்வுகளின் இயக்கம் அறுந்து போகும்
எனை மெளனத்திற்குள்
புதைத்து கொள்ளத் தோன்றும்/

/விளங்கிடவில்லையா
இந்த நொடி
காதலாய் கவிதையாய் உனக்கு..../

ம்ம். அசத்தல்.

அசந்து நின்றதற்கு நன்றி பாலா

sakthi said...

தமிழரசி said...

இந்த காதல் கவிதையைத் தான் எனக்காக விட்டு வைத்திருந்தாய் இதிலுமா?
...இனி எனக்கிங்கிங்கு வேலையில்லை.....

இத்தனை ஆழமான காதலா? நிலாவுக்கே கள்லா?

இதை உடனடியாக பரிசீலிக்க அரசிடம் முறையிடுகிறேன்....

முச்சுக் காற்றும் கவிதை சொல்லும் விந்தை....ஆஹா சுவை...

சக்தி உன்னை இப்படி எழுத தூண்டிய சக்திக்கு எத்தனை சக்தி...கல்லுக்குள் ஈரம் போல் சக்திக்குள் காதல்

அதிசயம் ஆனால் உண்மை....

வாழ்த்துக்கள் வலைச்சர ஆசிரியரே.....

நன்றி அரசியாரே

sakthi said...

கபிலன் said...

"உனை தொட்டும் தொடாமலும்
பட்டும் படாமலும் வருடிச் செல்லும்
என் வெப்பமூச்சுக்காற்று சொல்லிடும்
உனக்கான என் கவிதையை...."
அருமையா இருக்குங்க!

நன்றி கபிலன்

நசரேயன் said...

//எனக்கான கவிதை
எங்கென
எனைக்கேட்கும்
என்னவனே...//
ஏன் சக்தி உங்களுக்கு இந்த வேண்டாத வேலை, நான் எழிதின சக்தியை சொல்லலை

நசரேயன் said...

//உனக்கான கவிதை
கற்பனையில் உதித்து
காகிதத்திலா எழுதப்படும்??//

மனசுலே எழுதுவீங்களோ !!

நசரேயன் said...

//என் மருளும் கண்களுக்குள்
உருளும் கண்மணிகள் சொல்லும்
உனக்கான என் கவிதையை....//

கண்மணிகள் கவிதை சொல்லுற அளவுக்கு படிச்சி இருக்கோ !!!

நசரேயன் said...

//உனை தொட்டும் தொடாமலும்
பட்டும் படாமலும் வருடிச் செல்லும்
என் வெப்பமூச்சுக்காற்று சொல்லிடும்
உனக்கான என் கவிதையை....//

ஒ..அப்படியா

நசரேயன் said...

//நிலா கள் ஊற்றும்
நள்ளிரவில்
காற்றில் அலைந்து திரியும்
என் கைகளுனை காணாது
கண்ணீர் விடும்....//

நிலா கள் --> அது என்ன தென்னங்கள் இல்லை பனங்கள் ??

sakthi said...

நசரேயன் said...

//எனக்கான கவிதை
எங்கென
எனைக்கேட்கும்
என்னவனே...//
ஏன் சக்தி உங்களுக்கு இந்த வேண்டாத வேலை, நான் எழிதின சக்தியை சொல்லலை

அதானே நசரேயன் அண்ணா
இப்படி புலம்ப வைச்சுட்டாரே

sakthi said...

நசரேயன் said...

//உனக்கான கவிதை
கற்பனையில் உதித்து
காகிதத்திலா எழுதப்படும்??//

மனசுலே எழுதுவீங்களோ !!

ஆமாங்க அண்ணாச்சி

sakthi said...

நசரேயன் said...

//உனை தொட்டும் தொடாமலும்
பட்டும் படாமலும் வருடிச் செல்லும்
என் வெப்பமூச்சுக்காற்று சொல்லிடும்
உனக்கான என் கவிதையை....//

ஒ..அப்படியா

அப்படித்தான்

sakthi said...

நசரேயன் said...

//என் மருளும் கண்களுக்குள்
உருளும் கண்மணிகள் சொல்லும்
உனக்கான என் கவிதையை....//

கண்மணிகள் கவிதை சொல்லுற அளவுக்கு படிச்சி இருக்கோ !!!

கவிதை என்ன கவிதை காப்பியமே சொல்லும்

sakthi said...

நசரேயன் said...

//நிலா கள் ஊற்றும்
நள்ளிரவில்
காற்றில் அலைந்து திரியும்
என் கைகளுனை காணாது
கண்ணீர் விடும்....//

நிலா கள் --> அது என்ன தென்னங்கள் இல்லை பனங்கள் ??

அது நிலாவை தான் கேட்கனும் அண்ணா

ச. ராமானுசம் said...

கவிதை எழுதுபவன் மட்டுமல்ல

கவிதையாய் வாழ்பவனும் கவிஞன்தான்.

ஆ.ஞானசேகரன் said...

தலைப்பும் அதகேற்ற கவிதையும் நயமாக இருக்கு நண்பரே

sakthi said...

நன்றி ராமானுஜம்
நன்றி ஞானசேகரன்

thamizhparavai said...

நல்லா இருக்கு சக்தி... எப்படி இதை மிஸ் பண்ணினேன்னு தெரியலை...
வாழ்த்துக்கள்...

"உழவன்" "Uzhavan" said...

//நிலா கள் ஊற்றும்
நள்ளிரவில்
காற்றில் அலைந்து திரியும்
என் கைகளுனை காணாது
கண்ணீர் விடும்....//

வெகுவாக ரசித்த வரிகள்.