
வாழ்கையின் சிந்தனை மிகுந்த நேரங்களையும்,
நோய்களையும் வேதனைகளையும்
ஒதுங்கி நின்று பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்.
அவை எல்லாம் உருமாறி விடக்கூடிய
ஒன்று என்பதை உணருங்கள்.....
வெயிலும் கடுமையும் வந்தால்
குளிரும் மழையும் வரக்காத்திருக்கின்றது
என்பதை அறீவீர்கள்.....
துன்பத்தை கண்டு துவண்டு விடாதீர்கள்.
துன்பத்தை தொடர்ந்து இன்பமும்
வரத்தான் போகின்றது என்பதை
எண்ணி ஆறுதல் அடையுங்கள்....
வாழ்கையை மிகத்தீவிரமாக ஏற்றுக்கொள்ளும்
மனிதர்களிடம் பழகாதீர்கள்....
உங்களை சுற்றியுள்ள சூழ்நிலை
உங்களை நெருக்குவதாக நினைக்காதீர்கள்
எல்லாவற்றையும் எளிமையாக லேசாக ஏற்கத்தயாராகுங்கள்....
ஆண்டவன் லீலைகளில் மகிழ்ச்சி அடைபவன்
ஆண்டவன் வைக்கும் சோதனைகளை
எல்லாம் விளையாட்டாக எடுத்துக்கொள்ளுங்கள்....
சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள்
உள்ளத்தில் இருக்கும் வேதனைகளையும்
வீணான பயத்தையும் தூக்கி எறியுங்கள்
வெற்றியும் மகிழ்ச்சியும் மனப்பக்குவமும்
அடைய இதுவே சிறந்த வழி.....