Showing posts with label குழந்தை. Show all posts
Showing posts with label குழந்தை. Show all posts

Wednesday, August 19, 2009

உயிர் குடித்தல்!!!!


அந்த வாகனக்காற்று

அளாவியதில்

தொங்குநிலைஎன் உடல் அசைந்தது

விழிப்புற்றேன்

சோம்பல் முறிய

கொதிக்கும் தார் மணத்தால்

சூழப்பட்டிருந்தேன்

காற்றின் வெக்கை

கை கால் உதைத்தேன் காற்றுவெளியில்

அழத்தொடங்கினேன்

எங்கே அவள் ?

என் உணர்ச்சி புரியாதவளா ?

இல்லையே ?!

என்னுயிரின் வலியையே உணர்பவளாயிற்றே ?!

வருகிறாள் வருகிறாள்

அவளுக்கு இடம் மாற்றப்பட்டேன்

ஊசி முனைத்துவாரவழி

முறிந்த இரத்தத்தை

என்னுள் புகட்டும் ஆயத்தம்

ஆமாம் !

என்னுள் புதைந்த

சுரபி வழி

அவள் உயிர் குடிக்கும் முயற்சியில் நான் !!!!!!!!!

அடிப்பாவி !!!!!!!

உன் வறுமையின் சாரத்தை எல்லாம்

இங்கேயா இறக்கி வைத்திரு க்கிறாய் !!!!!!!!!!!!!!!????????????????????????

சண்டாளி !!!!!!

திரவமே இல்லையேடி

அவளுக்கு எட்டவில்லை

என்னவோ முணுமுணுக்கிறாள் !

"பாவி பயலுவோ இத கூட

கண்ணு வாங்காம "

நான் உயிர் குடிக்கும்

முயற்ச்சியில் தீவிரமாய் இருந்தேன் ...

பி.கு : சில கவிதைகள் மனதை விட்டு அகலாது இது நான் மிகவும் ரசித்த கவிதை இந்த வலையுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய என் உடன் பிறவா சகோதரர் பாலாவின் கவிதை.

அவர் வலைத்தளம் கடல் புறா