
அண்ட சராசரங்கள் எம்
ஆளுகைக்கு கீழ் என்பன் தமை
அண்டி நிற்போர்க்கு
ஆனந்தமே எல்லை என்பன்.....
சிந்தாந்த செதுக்கல்களை நம்
சிந்தைக்கு தெளித்திட்டு
சிற்றின்பத்தில் மூழ்கும்
அற்பப் பதர்கள் இவர்கள்.....
களைந்தொழிக்கவேண்டும்
கபால விழிகளில் மிகுந்திருக்கும்
காமத்தை அறியா கன்னியருக்கு
களவியல் பாடத்தை
கற்பிக்கும்
கள்ளவிஷக்காளான்களை
கயமையில் திளைத்திடும்
காவியுடைக்கள்வர்களை.....