
மெல்லிய விரல்களால்
என் நரம்பு வயல்களில்
நடவு நட்டு....
என் வெப்பத்தை
போர்த்துக் கொண்டு
உறங்கவேண்டுமென
உப்பு மலர்களை
உதிர்க்கின்ற குட்டி நட்சத்திரம் ஒன்று!!!
ஊற்றாய் சந்தோஷம் பொங்கிட
உள்ளார்ந்த குறும்பில்
உதட்டோரம் சிறு குழிவுடன்
செம்பஞ்சுக்குழம்பில் தோய்த்த
பிஞ்சப்பாதங்களுடனும்
செல்லச்சிணுங்கலும்
மெல்லிய மினுங்கலுமாய்
என் மார்போடணைத்து
மடி மீது அமர்ந்து
சிறு கதை சொல்ல
கேட்டு கண்ணயரும்
பட்டுத்தென்றல் மற்றொன்று!!!!
இவர்களின்
மோகனப்புன்னகையில்
மயங்கி நின்றதில்
என் கவிதைகள் யாவும்
முற்றுப்பெறாமல் முடிந்துவிடுமின்று.....