
என்னவளே என்னில் கரைந்தவளே
உன் வருகைக்காக ஏங்கும்
என் ஒவ்வொரு இதயத்துடிப்பும்...
லட்சங்களில் நான்
சம்பாதித்தபோதும்
எனது வாழ்வின் லட்சியம் நீ
வாழ்வின் செழுமைக்காக இளமையை
தொலைத்துவிட்ட பாவி நான்...
என் தேகத்தின்
ஒவ்வொரு செல்லும்
செய்யும் யாகத்தின் வரமடி நீ...
நான் கட்டிவைத்துள்ள
என் ஹார்மோன்களின் தவிப்பை
உன்னால் மட்டுமே
கட்டவிழ்த்துவிடமுடியும்...
காலப் பெருவெளியில்
பிரபஞ்சப் காரிருளில்
நாம் கரைந்திட்டே
கூடு விட்டு கூடு ஜீவன்
பாய்ந்திடதோன்றிடுதே...
கனவில் மட்டுமே கண்ட நம் மழலைக்கு
உயிரும் மெய்யும் தரப்போகும்
உன் வரவுக்காய் வழிமேல் விழியோடு
அது என் சாயலா இல்லை உன் சாயலா
என எண்ணி எண்ணி தவிப்போடு...
என் தேவதையே
இன்னமும் 10 நாட்களாம்
நாட்குறிப்பின் தாள்களை
வேகமாய் கிழித்து
உன் வரவின் நாளை
மேனிசிலிர்க்க பார்த்திருப்பேன்
உனக்காய் காத்திருப்பேன்...