திரிபு வார்த்தைகளும்
தத்துவார்த்த பிழைகளும்
தின்மச் சொற்களும்
தந்த ரணங்களை சுமந்து
இடர் சூழ்ந்த இவ்வுலகில்
பொருள் தேடி அலைகிறேன்....
துயரம் சொல்லொணாத்
தவிப்புடன் உடல் நிறைக்க
இறுகிப்போன சக்கையாய் மனம்....
நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால்
தன்னந்தனியாய் தவிக்கும்
அழுகையின் நிறம்
மீளாத்துயருடன்
பின் தொடரும் நிழலாய்
நினைவுதிர்த்து போகின்றது.....